ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் ராபிடோ என்கிற நிறுவனத்துக்காக நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த விளம்பர வீடியோ ஒன்று வெளியானது. இருசக்கர வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்ல உதவும் ராபிடோ என்கிற ஆப்-பின் வசதிகளை விவரிக்கும் இந்த விளம்பரத்தில் தெலங்கானா அரசு போக்குவரத்து பேருந்துகள் கூட்ட நெரிசலாக இருப்பதாகவும் அவற்றில் பயணிப்பதற்கு பதிலாக ராபிடோ பயன்படுத்துவது சிறந்தது என்றும் அல்லு அர்ஜுன் வசனம் பேசியிருந்தார். .
இது அரசு போக்குவரத்து பேருந்துகளை அவமதிப்பு செய்யும் விதமாக இருப்பதாக கூறிய தெலங்கானா அரசு போக்குவரத்து கழக நிர்வாக மேலாளர் சஜ்ஜனார், அரசு சேவை நிறுவனங்களை அவமதிப்பு செய்யும் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதை அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார். இதை தொடர்ந்து அந்த நிறுவனம் விளம்பரத்தில் சிறிய மாற்றம் செய்ததே தவிர, அரசு பேருந்துகள் பற்றிய விமர்சனத்தை நீக்கவில்லை.
இதையடுத்து தற்போது தெலங்கானா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அந்த விளம்பரத்தை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது அந்த வீடியோவை நீக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு பேருந்துகள் என்பவை பொதுச்சொத்து. அவை மக்களை நம்பியே இயங்கி வருகின்றன. பல தலைமுறைகளாக தொடரும் அந்த சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது..