என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

மலையாள நடிகர் சங்கத்திற்கு (அம்மா) 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் மோகன்லால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வருகிற 19ம் தேதி 2021-2023ம் ஆண்டுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது.
இந்த தேர்தலுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தலைவர் பதவிக்கு நடிகர் மோகன்லால், பொதுச்செயலாளர் பதவிக்கு இடைவேளை பாபு ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்களை வாபஸ் பெறும் தேதி முடிந்த நிலையில், நேற்று மனுக்கள் பரிசீலனை நடந்தது.
இதில் தலைவர் பதவிக்கும், பொதுச்செயலாளர் பதவிக்கும் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து தலைவராக மீண்டும் நடிகர் மோகன்லால் தேர்வு செய்யப்படுகிறார். இதே போல் பொதுச்செயலாளராக இடைவேளை பாபுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். மற்ற பதவிகளுக்கும் 19ம் தேதி வாக்குபதிவு நடக்கிறது. அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படுகிறது.