வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் |
மலையாள நடிகர் சங்கத்திற்கு (அம்மா) 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் மோகன்லால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வருகிற 19ம் தேதி 2021-2023ம் ஆண்டுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது.
இந்த தேர்தலுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தலைவர் பதவிக்கு நடிகர் மோகன்லால், பொதுச்செயலாளர் பதவிக்கு இடைவேளை பாபு ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்களை வாபஸ் பெறும் தேதி முடிந்த நிலையில், நேற்று மனுக்கள் பரிசீலனை நடந்தது.
இதில் தலைவர் பதவிக்கும், பொதுச்செயலாளர் பதவிக்கும் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து தலைவராக மீண்டும் நடிகர் மோகன்லால் தேர்வு செய்யப்படுகிறார். இதே போல் பொதுச்செயலாளராக இடைவேளை பாபுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். மற்ற பதவிகளுக்கும் 19ம் தேதி வாக்குபதிவு நடக்கிறது. அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படுகிறது.