விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
ஒரு வார இதழில் வந்த பேட்டிக்காக பல்வேறு தரப்பிலிருந்தும் அந்த கவர்ச்சி நடிகை மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவரது வியாபார நிறுவனங்கள் முடங்கி விட்டன. கமிஷனர் ஆபீசுக்கும், கோர்ட்டுக்கும் அலைந்து கொண்டிருக்கிறார். வாடகை வீட்டுக்காரர்கள் காலி பண்ணச் சொல்கிறார்கள். கடைக்கு இடம் கொடுத்தவர்கள் காலி பண்ணச் சொல்கிறார்கள். பணியாளர்கள் வேலைவிட்டு நின்று விட்டார்கள். தங்கை மகளை படித்த பள்ளியிலிருந்து விலகிக் கொள்ளச் சொல்கிறார்கள். அம்மாவும், தங்கையும் பேசி பல நாட்களாச்சு. இதெல்லாம்கூட நடிகைக்கு பெரிய வருத்தம் இல்லை. இதுநாள் வரை தன்னைச் சுற்றி இருந்து நண்பர்கள் கூட்டம் எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறார். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக கூட உதவ யாரும் முன்வரவில்லை. குறைந்த பட்சம் ஆறுதல் சொல்லக்கூட யாரும் முன்வரவில்லை. "இப்போதுதான் நண்பர்களை புரிந்து கொண்டிருக்கிறேன். இனி எனக்கு நண்பர்களே வேண்டாம். நானே தனியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன். நிஜத்தில் நான்தான் டிஷ்யூ பேப்பர் ஆகியிருக்கிறேன்" என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் நடிகை.