'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
தமிழ்த் திரையுலகில் பிரபலமாக இருக்கும் இயக்குனரிடம் உதவியாளராக வேலை பார்த்தவர் அந்த 'லீ' இயக்குனர். தன்னுடைய உறவினர் தயவால் அரசன் அரசி படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. கதைக்காக அதிகம் அலட்டிக் கொள்ளாமல் தமிழ்த் திரையுலகத்தின் மற்றுமொரு பிரபல இயக்குனரான படம் ஒன்றின் கதையையே சுட்டு இந்தக் காலத்திற்கேற்ப அதைக் கொஞ்சம் மாற்றி படமாக எடுத்தார். படமும் சுமாரான வெற்றியைப் பெற்றது. மீண்டும் அதே உறவினர் தயவால் தமிழ்த் திரையுலகின் வசூல் நாயகன் தளபதி புலி நடிகரிடமும் கதையைச் சொன்னார். இந்த முறையாவது புதிய கதை சொல்லியிருப்பார் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது தவறு, மீண்டும் ஒரு பழைய தமிழ்ப் படத்தின் கதையையே சொல்லி படத்தையும் எடுத்து முடித்தார். அந்தப் படமும் வெற்றி பெற்றது.
5 அடி 50 கிலோ எடை கொண்ட அந்த இயக்குனரின் அலட்டல் பற்றி சொல்லி மாளாது என்கிறார்கள் அவரைப் பற்றித் தெரிந்தவர்கள். சுட்ட கதையின் விவாதத்திற்கே 1 கோடி ரூபாய் வரை செலவிட்ட சிக்கனக்காரர். அது மட்டுமா தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கு செக்யூரிட்டியாக சிலரை நியமித்திருக்கிறார். அதை புலி நடிகர் படத்தை இயக்கும் போதும் தொடர்ந்திருக்கிறார். முதலில் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட புலி நடிகர் போகப் போக அதை காமெடியாகவே பார்த்திருக்கிறார். இப்போது மீண்டும் புலி நடிகர் படத்தை அந்த 'லீ' இயக்குனர் இயக்கப் போகிறார். படம் ஆரம்பிப்பதற்கு முன்பே இயக்குனரை கூப்பிட்டுச் சொல்லிவிட்டாராம். இந்த செக்யூரிட்டி வச்சிக்கிட்டு பந்தா பண்றது, பாவ்லா காட்டறதுலாம் கூடாது என 'ஸ்ட்டிரிக்ட்' ஆக சொல்லிவிட்டாராம். 5 அடி 50 கிலோ இருக்கிறவருக்கு 500 கிலோவுல 5 செக்யூரிட்டு வேணுமா...என நக்கலடிக்கிறார்கள் அந்த லீ இயக்குனரைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள். கேட்டால் இப்படி பந்தா பண்ணால்தான் மதிப்பார்களாம். புலியே அமைதியாக இருக்க, இந்த பூனை ஏன் இப்படி புர்..புர்..ருங்குது என்கிறார்கள்.