ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
ரவுத்திரம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில், கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீ திவ்யா நடித்து, தீபாவளிக்கு வெளி வர உள்ள, காஷ்மோரா படம் பற்றி, கார்த்தி பேசுகிறார்.
காஷ்மோரா படத்தில், உங்கள் ரோல் என்ன?
இயக்குனர் கோகுலின், மூன்று ஆண்டுகள் உழைப்பில் உருவானது, இந்த கதை. இந்த ரோல், எனக்கு ரொம்ப புதுசு. தமிழ் சினிமாவில், இதுவரை யாரும் கையில் எடுக்காத கேரக்டர். மந்திர, தந்திரவாதி கேரக்டரில் நடித்துள்ளேன். இந்த படத்தில், என் கேரக்டர் மட்டுமல்ல, தோற்றமும் ரொம்ப புதிதாக இருக்கும்.
இந்த கதையை எப்படி தேர்வு செய்தீர்?
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை பார்த்ததுமே, அதன் இயக்குனர் கோகுல் இயக்கத்தில், ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என, ஆசைப்பட்டேன். அப்போது, அவர், என்னிடம் ஒரு பேய் கதை கூறினார். அதில், மேஜிக் செய்யும் ஒரு கேரக்டர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அப்புறம், ௫௦௦ ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, ராஜ்நாயக் என்ற போர் வீரனை பற்றி, அவர் கூறியதும் எனக்கு பிடித்திருந்தது. நடிக்க சம்மதித்தேன்.
இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?
வரலாற்றை மையமாக வைத்து தயாரிக்கும் படம் என்பதால், கிராபிக்ஸ் வேலைகளும் அதிகம் உள்ளன. படப்பிடிப்புக்கும் நீண்ட நாட்கள் பிடித்தது; கடுமையாக உழைத்திருக்கிறோம். எங்களின் உழைப்பு தான், இந்த படத்தில் ஸ்பெஷல்; அது, படம் பார்க்கும் போது தெரியும்.
இது, பேய் படமா; மேஜிக் படமா?
இது பேய் படம், மேஜிக் படம் மட்டுமல்ல; வரலாற்று படமும் கூட; இன்னும் கூற வேண்டுமானால், இதில் காமெடியும் கலக்கலாக இருக்கும். படத்தின் டிரெயிலர் பார்க்கும் போது, சீரியசாக தெரியும். ஆனால், படத்தின் ஹைலைட்டே காமெடி தான்.
இரட்டை வேடத்தில் நடிக்கிறீர்களே; எப்படி வித்தியாம் காட்டியிருக்கிறீர்கள்?
தோற்றம், உடை என, அனைத்து விஷயத்திலுமே, ரொம்பவே வித்தியாசம் காட்டியிருக்கிறேன். எனக்காக, 15 உடைகள் வடிவமைக்கப்பட்டு, கடைசியாக, அதிலிருந்து ஒரு உடையை தேர்வு செய்தோம். சிலை செதுக்குபவர்கள், கிரீடம் செய்பவர்கள் எல்லாம், இப்போது வேலைஇல்லாமல் இருக்கின்றனர். அவர்களை எல்லாம் தேடிப்பிடித்து, இந்த படத்துக்காக அழைத்து வந்தோம்.
நயன்தாரா பற்றி...
ரத்னமாலா என்ற கேரக்டரில், நயன்தாரா நடிச்சிருக்காங்க. படத்தில், ௩௦ நிமிடம் தான், இந்த கேரக்டருக்கு வேலை. ஆனால், மிக முக்கியமான கேரக்டர் இது. நயன்தாரா, இதுவரை ராணியாக எந்த படத்திலும் நடித்தது இல்லை. அதனால், படத்தின் கதையை கேட்டதுமே, நடிக்க சம்மதித்தார்.
ஸ்ரீதிவ்யாவுக்கு என்ன ரோல்?