ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். அது மாதிரி நடிப்பு கல்லூரி சினிமாவுக்கு உதவாது என்பார்கள். ஆனாலும் தமிழ்நாட்டில் சினிமா கல்லூரிகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டுதான் இருகிறது. பத்திரிகைகளின் வரி விளம்பரங்களில், நீங்கள் ஹீரோவாக வேண்டுமா? சினிமாவில் நடிக்க வேண்டுமா விளம்பரங்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது.
எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரி
தமிழ்நாட்டில் தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரிதான், திரைப்படக் கல்லூரிகளின் தாயகம். ஆரம்ப காலத்தில் இந்த கல்லூரி பிலிம் சேம்பர் வளாகத்தில் செயல்பட்டது. பின்பு தரமணிக்கு மாற்றப்பட்டது. ரஜினி, நாசர், பி.சி.ஸ்ரீராம், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர், திரைப்பட கல்லூரி மூலமாக சினிமாவுக்கு வந்தவர்கள். ஊமை விழிகள் படம் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு தனி அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது. என்றாலும் தரமணி வளாகத்திலிருந்து ஒளிப்பதிவாளர்ள் தவிர மற்றவர்களின் வருகை குறைவாகத்தான் இருக்கிறது.
ஒரு காலத்தில் மெடிக்கல் சீட்கூட வாங்கி விடலாம். தரமணி பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சீட் வாங்குவது கஷ்டம். ஆனால் இப்போது தரமணி இன்ஸ்டிடியூட்டை நாடி யாரும் செல்வதில்லை. காரணம் காலத்துக்கேற்ற நவீன மாற்றங்கள் இல்லை. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அப்டேட் இல்லை. போதுமான ஆசிரியர்கள் இல்லை. இந்த நிலையில் கோடம்பாக்கத்தை சுற்றி சிறிதும், பெரிதுமாக பல தனியார் திரைப்பட பயிற்சி நிலையங்கள் தோன்றியது. இந்த பயிற்சி நிலையங்களில் படித்து சினிமாவில் யாரும் ஜெயித்ததாக தெரியவில்லை.
தனியார் கல்வி நிறுவனங்கள்
பிரசாத் நிறுவனம் பிரசாத் பிலிம் அகாடமியை நடத்தி வருகிறது. இயக்குனர் பாலுமகேந்திரா சினிமா பட்டறை என்ற பயிற்சி மையத்தை தொடங்கினார். இதுதவிர கூத்துப்பட்டறை நடிப்பு பயிற்சி மட்டும் அளித்து வருகிறது. ஆங்கில நாடக பயிற்சி மையங்கள் நிறைய நடத்தப்பட்டு வருகிறது. விஜயா ஸ்டூடியோ வளாகத்தில் ஆர்கேவி திரைப்பட பயிற்சி மையம் நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தயாரிப்பாளர் தனஞ்செயன் ப்ளூ ஓசன் பிலிம் அகாடமி என்ற ஒரு கல்லூரியை தொடங்கியிருக்கிறார். சின்னத் திரை தயாரிப்பாளரும் இயக்குருமான ஜெயவேல் விரைவில் ஜேவி மீடியாக அகாடமி என்ற கல்லூரியை தொடங்க இருக்கிறார். இது தவிர டிஜிட்டல் தொழில்நுட்பங்களை வழங்கும் சில நிறுவனங்கள் அதனுடன் இணைத்து சினிமா பயிற்சி மையங்களை நடத்துகிறது.
இதுதவிர தற்போது பெரும்பான்மையான கல்லூரிகளில் திரைப்பட பயிற்சிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. அல்லது விஷ்காம் பட்டப்படிப்பின் மூலம் சினிமாவுக்கான அடிப்படை விஷயங்கள் கற்றுத் தரப்படுகிறது. இதுதவிர தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கும் தனியாக திரைப்படக் கல்லூரி அமைக்கும் திட்டம் உள்ளது.
லட்சக் கணக்கில் கட்டணம்
தற்போதுள்ள திரைப்பட அகாடமிகளில் இயக்குனர், ஒளிப்பதிவாளர், எட்டிட்டர், சவுண்ட் டிசைனர், திரைக்கதை வடிமைப்பு, நடிப்பு, தயாரிப்பு என தனி தனி ஸ்கோர்சுகள் நடத்துகிறார்கள். இதில் சில அகாடமிகள் எல்லா கோர்சுக்கும் சேர்த்து ஒரு வருட பட்டய படிப்புக்கு இரண்டு லட்சம் முதல் 3 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். இதுவே மூன்று வருட பட்டப்படிப்பாக இருந்தால் 4 லட்சத்துக்கு மேல் கட்டணம் வசூலிக்கிறார்கள். சினிமாவில் சேர விரும்பும் சினிமா வாரிசுகளும், பண வசதி உள்ளவர்களும் மட்டுமே இந்த படிப்பை தேர்வு செய்து படிக்கிறார்கள். ஏழை மாணவர்கள் திரைப்படக் கல்லூரியின் வாசலைகூட மிதிக்க முடியாது என்பதுதான் இன்றைய நிலை.
வாக்குறுதிகளும், வாய்ப்புகளும்
திரைப்பட பயிற்சி மையங்களோ, திரைப்பட அகாடமிகளோ, கல்லூரிகளோ திரைப்படத்தை கற்றுத்தருமே தவிர வாய்ப்புகளை பெற்றுத் தராது. ஆனால் சில அமைப்புகள் வாய்ப்புகளை பெற்றுத் தருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மாணவர்களை இழுக்கின்றன. பிரபலமான கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தி வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுவதை போல சினிமா கல்லூரிக்கு சென்று யாரும் ஆட்கள் எடுப்பதில்லை.
குருகுல முறையில் ஒரு இயக்குனரிடமோ, ஒளிப்பதிவாளரிடமோ உதவியாளராக இருந்து சினிமா கற்றவர்களே சினிமாவின் தொழில்நுட்பத்தோடு அதன் நெளிவு சுழிவுகளையும் கற்றுக் கொண்டு வாய்ப்புகளை பெறுகிறார்கள். திரைப்பட கல்லூரிகள் திரைப்படம் பற்றி கற்றுத் தரும். வாய்ப்புகளை பெற்றுத் தராது. வாய்ப்புகளை தங்கள் திறமையை கொண்டு தாங்கள்தான் தேடிக் கொள்ள வேண்டும் என்பதை மாணவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.