ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'புதுப்புது கதைகள்; புதுப்புது இயக்குனர்கள். புதுப்புது படங்கள்னு, எக்கச்சக்க புதுமைகளோட இருந்தாலும், தமிழ் சினிமாவுக்கு நெருக்கடியான காலம் இது; காரணம், ஒரு படம் தியேட்டர்ல ஒரு வாரம் ஓடினாலே, அது பெரிய விஷயம்; 'பிழைக்கத் தெரிந்தால் சினிமாவில் தாக்குப் பிடிக்கலாம்!' இதுதான் இன்னைக்கு நிலைமை!' - 'அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், எனக்குள் ஒருவன்' என, தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை தயாரித்தது மட்டுமல்லாமல், இந்தியில் இரண்டு படங்கள், கன்னட மொழியில் 'தெகிடி' ரீமேக் என, மாநிலங்கள் தாண்டி தடம் பதித்து வரும், தயாரிப்பாளர் சி.வி.குமாரின் நிதர்சனப் பேச்சு இது. 'அனிமேஷன்' துறையில் இருந்தவரை, தயாரிப்பு நிறுவனம் துவக்க வைத்தது, 2010ம் ஆண்டு அவர் மேற்கொண்ட லாஸ் ஏஞ்சல்ஸ் பயணம். அதிலிருந்தே நாமும் துவக்குவோம்...
லாஸ் ஏஞ்சல்ஸ் பயணமும், திருக்குமரன் தயாரிப்பு நிறுவனமும்...
அங்கே இருக்குற 'வீடா' உள்ளிட்ட மிகப்பெரிய விஷுவல் எபெக்ட்ஸ் நிறுவனங்கள்ல, என்னோட நண்பர்கள் வேலை பார்த்துட்டு இருக்கறாங்க! அவங்களை சந்திக்கப் போன போதுதான், அங்க இருக்குற தயாரிப்பு நிறுவனங்களோட தரம், அவங்க வேலை பார்க்கும் முறை, உத்திகள்ன்னு, எல்லாமே ரொம்ப தெளிவா இருந்ததை கவனிச்சேன். 'இந்த விஷயங்களை, நம்ம சினிமாவுலேயும் பண்ணினா நல்லா இருக்குமே'ன்னு ஒரு எண்ணம்; அந்த எண்ணத்தோட வெளிப்பாடுதான் இந்த தயாரிப்பு நிறுவனம்!
ஒரு கதை கேட்கும்போது, என்னென்ன எதிர்பார்ப்புகள் இருக்கும்?
'ரசிகர்களை இரண்டு மணி நேரம் ரசிக்க வைக்குமா?' என்ற கேள்விக்கு, 'நிச்சயமா ரசிப்பாங்க'ன்னு, என் மனசு பதில் தந்தா, அந்த படத்துக்கு நான் தயாரிப்பாளர்! ஆனா, இயக்குனர்கிட்ட சில விஷயங்களை எதிர்பார்ப்பேன். 'ஒரு குழுவா இயங்க அவரால முடியுமா?'னு சோதிப்பேன். 'இந்த ஒத்துழைப்பு மனோபாவம்தான், ஒரு படம் சிறப்பா வர்றதுக்கு அடிப்படை'ங்கறது, என் நம்பிக்கை!
அதிகபட்சமா, ஒரு படத்துக்கு எவ்வளவு செலவு செய்வீங்க?
அது, ஒவ்வொரு கதையைப் பொறுத்து மாறும்; என்னைப் பொறுத்தவரைக்கும், சினிமாங்கறது மக்களோட உணர்வு சம்பந்தப்பட்ட, வித்தியாசமான வியாபாரம்! பெரிய தொகையை நடிகருக்கு சம்பளமா கொடுத்து படம் பண்றதுல, எனக்கு விருப்பம் இல்ல; நான் கதையை நம்பி படம் எடுக்குறவன்! 'எனக்குள் ஒருவன்'படத்துல கூட, தானேதான் நடிக்க முன் வந்தார் சித்தார்த்!
பர்ஸ்ட் லுக், பர்ஸ்ட் போஸ்டர், ப்ரொமோ சாங், டீஸர், டிரைலர் - ஒரு படத்துக்கு இவ்வளவு விளம்பரம் தேவையா?
இப்ப இருக்குற சூழல்ல, கும்பலா வெளிவர்ற படங்கள்ல இருந்து, நம்ம படம் தனியா தெரியணும்னா, இதையெல்லாம் பண்ணித்தான் ஆகணும். இதெல்லாம் 'அவசியம்' இல்ல; அத்தியாவசியம்!
தமிழ் சினிமா ரசிகர்களின் மனநிலை பற்றி...
'இப்படித்தான்'னு, கணிக்கவே முடியலை! 'ஏ' சென்டர் ரசிகர்கள்கிட்ட கதை முக்கியத்துவம் இருக்கற படங்களுக்கு வரவேற்பு இருக்கும். அதுவே, 'சி' சென்டர் ரசிகர்கள்கிட்ட, பெரிய நடிகர்களோட படங்கள் மட்டுமே எடுபடும். அதனாலதான், 'அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும்' படங்கள் எல்லாம், அவங்க மத்தியில ஓடவே இல்ல. இந்த இரண்டு தரப்புக்கும் நடுவுல இருக்கிறாங்க பாருங்க, அவங்க 'பி' சென்டர் ரசிகர்கள். ஆனா, சினிமாவோட 50 சதவீத வருமானத்தை தர்றது, 'சி' சென்டர் ரசிகர்கள்தான்!
அடுத்து என்ன?
'டிராய்' மாதிரி ஒரு 'அனிமேஷன்' படம் எடுக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு! ஆனா, அது நிறைய நேரமும், பணமும் சாப்பிடற விஷயம். சாதாரணமா படம் எடுக்கவே 30 கோடி ரூபாய் தேவைப்படுது. அதனால, அந்த கனவை இப்போதைக்கு தள்ளி வைச்சுட்டு, இன்னும் இரண்டு மாசத்துல, ஒரு படம் இயக்கலாம்னு திட்டம்.