அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' |
1979ம் ஆண்டு சக்களத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அம்பிகா. தனது 16வது வயதில் மலையாள படங்கள் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை துவங்கிய அம்பிகா, தமிழில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.
கடல்மீன்கள், சகலகலா வல்லவன், எங்கேயோ கேட்ட குரல், வாழ்வே மாயம், விக்ரம், வெள்ளைப்புறா, காக்கிச்சட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்கள் முதல் சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா படம் வரை பல படங்களில் நடித்து, தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ளார், அம்பிகா. 1980 களில் அம்பிகாவின் நடிப்பு மட்டுமல்ல, அவரின் ஹேர்ஸ்டைலும் பெரிய அளவில் பேசப்பட்டு, புகழ்பெற்றிருந்தது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த அம்பிகா, திருவனந்தபுரத்தின் கள்ளறாவில் உள்ள அவரது தரவாடான (பிறந்த வீடு) அம்பிகாபவனில் தனது 50வது பிறந்த நாளை மிக எளிமையாக தனது குடும்பத்தினருடன் இன்று கொண்டாடினார். அம்பிகாவிற்கு போனில் வாழ்த்து தெரிவித்த தினமலருக்கு அவர் நன்றி தெரிவித்ததுடன் சிறப்பு பேட்டியும் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:
ஓணம் பண்டிகையை போன்று பல வகையான உணவு விருந்துடன் எனது அம்மா, தம்பி ஆகியோருடன் எனது பிறந்த நாளை கொண்டாடி கொண்டிருக்கிறேன். 30 வருடங்களாக சினிமா துறையில் இருக்கிறேன். இத்தனை வருடங்களாக எனக்கு அளித்து வரும் அன்புக்கும் ஆதரவிற்கும் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது மலையாளத்தில் மிலி என்ற படத்திலும், பிரியதர்ஷனின் படத்திலும் நடித்து வருகிறேன். எனது குடும்பத்தில் இருப்பவர்களும் திரையுலகிற்கு வந்திருப்பதால், எனக்கு அளித்த அன்பையும், ஆதரவையும் எனது குடும்பத்தினருக்கும் அளிக்க வேண்டும் என தமிழ் ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன் என அம்பிகா கூறினார்.