ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜீ தமிழ் சேனலில் இன்று முதல் ஒளிபரப்பாகும் புதிய தொடர் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி. வித்தியாசமான கதை களத்தை கொண்ட தொடராக இது உருவாகி ஒளிபரப்பாக இருக்கிறது.
சராசரிக்கும் கூடுதலாக குண்டான பெண் ராசாத்தி. அன்பானவள், தைரியமானவள் என்றாலும் தன் மகளின் தோற்றத்தால் அவளுக்கு எப்படி திருமணமாகும், அவள் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று கவலை கொள்கிறார் தாயான செண்பகவல்லி. ஆனால் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுகிறது. ராசத்தி கபடி வீரர் இனியனை திருமணம் செய்கிறார். அதன் பிறகு அவர் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதுதான் தொடரின் கதை.
இதில் ராசாத்தியாக புதுமுகம் அஸ்வினி நடிக்கிறார், அவரது தாய் செண்பகவல்லியாக சபீதா ஆனந்த் நடிக்கிறார், ராசாத்தி கணவர் இனியனாக வசந்த் நடிக்கிறார். ஆர்.தேவேந்திரன் இயக்குகிறார். ஜானி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.