சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
தமிழ் சினிமாவின் சீனியர் நடிகையான அர்ச்சனா 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். நன்றாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் சமீபகாலமாக மோசமான திரைக்கதையுடன் நகர்ந்து வருகிறது. இந்நிலையில், மீனாட்சி பொண்ணுங்க சீரியலிலிருந்து விலகுவதாக அர்ச்சனா அதிகாரப்பூர்வமாக அறிவித்து வெளியேறிவிட்டார். சீரியலின் கதை போக்கும், கதாபாத்திரத்தின் நகர்வும் அர்ச்சனாவுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியதாகவும் இதனால் ஏற்பட்ட அதிருப்தியினால் கொஞ்ச நாளாகவே சீரியலில் இருந்து தன்னை நீக்கிவிடுமாறும் அர்ச்சனா கூறி வந்தாராம். ஆனால், சீரியல் குழு பல காரணங்களை அர்ச்சனா வெளியேறவிடாமல் தடுத்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ப்ராஜெக்ட்டில் தொடர்ந்து வேலை செய்ய வேண்டுமா? என்று யோசித்த அர்ச்சனா சீரியலிலிருந்து வெளியேறுவது தான் நல்லது என சீரியலிலிருந்து வெளியேறிவிட்டாராம். தற்போது அர்ச்சனா நடித்து வந்த கதாபாத்திரத்தில் இனி யார் நடிக்க போகிறார் என பலரும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.