'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா தொடருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. மிர்ச்சி செந்தில், நித்யா ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரமான வீரா என்கிற வீரலெட்சுமி கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் வீஜே தாரா நடித்தார். இவர் விலக அதன்பிறகு தர்ஷு சுந்தரம் நடித்தார். அவரும் விலகிவிட கவுரி கோபன் என்ட்ரி கொடுத்தார். ஆனால், தற்போது கவுரி கோபனும் அண்ணா தொடரிலிருந்து அதிரடியாக விலகியிருக்கிறார். இப்படி வீரா கதாபாத்திரத்தில் நடித்த மூன்று நடிகைகளுமே அடுத்தடுத்து விலகிவிட்டனர். இதனையடுத்து அந்த கதாபாத்திரத்தில் சுசித்ரா என்ற நடிகை நடிக்கவிருக்கிறார். இவர் எத்தனை நாளைக்கு தாக்குபிடிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.