வீரம் படத்தினால் என கேரியர் பாதிப்பு ஆனது : மனோ சித்ரா | காஞ்சனா 4ம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பேட் கேர்ள் பட டீசருக்கு சென்சார் வாங்கவில்லையா? | 100வது நாளில் அமரன் படம் | மாற்றி அறிவிக்கப்பட்ட மம்முட்டியின் பஷூக்கா ரிலீஸ் தேதி | 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரித்விராஜ் படத்தை இயக்கும் ஜீத்து ஜோசப் | கேரள கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகசைதன்யா | துல்கர் சல்மான் படம் மூலம் மீண்டும் டைரக்சனுக்கு திரும்பும் மின்னல் முரளி ஒளிப்பதிவாளர் | பிளாஷ்பேக் : மூன்றாம் பிறை படத்திற்காக ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? | பிளாஷ்பேக் : ஒரே பிரேமில் 5 சின்னப்பா : 80 வருடங்களுக்கு முன்பே தொழில்நுட்ப சாதனை |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா தொடருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. மிர்ச்சி செந்தில், நித்யா ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரமான வீரா என்கிற வீரலெட்சுமி கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் வீஜே தாரா நடித்தார். இவர் விலக அதன்பிறகு தர்ஷு சுந்தரம் நடித்தார். அவரும் விலகிவிட கவுரி கோபன் என்ட்ரி கொடுத்தார். ஆனால், தற்போது கவுரி கோபனும் அண்ணா தொடரிலிருந்து அதிரடியாக விலகியிருக்கிறார். இப்படி வீரா கதாபாத்திரத்தில் நடித்த மூன்று நடிகைகளுமே அடுத்தடுத்து விலகிவிட்டனர். இதனையடுத்து அந்த கதாபாத்திரத்தில் சுசித்ரா என்ற நடிகை நடிக்கவிருக்கிறார். இவர் எத்தனை நாளைக்கு தாக்குபிடிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.