பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா தொடருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. மிர்ச்சி செந்தில், நித்யா ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரமான வீரா என்கிற வீரலெட்சுமி கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் வீஜே தாரா நடித்தார். இவர் விலக அதன்பிறகு தர்ஷு சுந்தரம் நடித்தார். அவரும் விலகிவிட கவுரி கோபன் என்ட்ரி கொடுத்தார். ஆனால், தற்போது கவுரி கோபனும் அண்ணா தொடரிலிருந்து அதிரடியாக விலகியிருக்கிறார். இப்படி வீரா கதாபாத்திரத்தில் நடித்த மூன்று நடிகைகளுமே அடுத்தடுத்து விலகிவிட்டனர். இதனையடுத்து அந்த கதாபாத்திரத்தில் சுசித்ரா என்ற நடிகை நடிக்கவிருக்கிறார். இவர் எத்தனை நாளைக்கு தாக்குபிடிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.