மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
சின்னத்திரை நடிகையான சாய் காயத்ரி ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். தற்போது சீரியல் நடிப்பதற்கு ப்ரேக் விட்டுள்ள சாய் காயத்ரி, சொந்தமாக அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். சாய் சீக்ரெட்ஸ் என்ற அந்த கம்பெனியில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்.
இந்நிலையில், சாய் காயத்ரி அண்மையில் தனது கம்பெனியில் இருக்கும் ஒரு இயந்திரத்தில் கையை விட்டு விபத்தில் சிக்கியுள்ளார். இதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் 2 வாரங்களில் சரியாகிவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து சாய் காயத்ரியின் ரசிகர்கள் சீக்கிரமே அவர் பூரண நலம் பெற வர வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.