22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி, நாயகனாக நடித்து, இயக்கிய, காந்தாரா திரைப்படம் 2022ல் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டானது. அமோக வெற்றியால் உற்சாகமடைந்த ரிஷப் ஷெட்டி, படத்தின் முன்கதையாக, காந்தாரா சாப்டர் 1 என்ற படத்தை நடித்து, இயக்கி வருகிறார். படத்தில் நடித்த மூன்று நடிகர்கள், ஒன்றரை மாத இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த சூழலில், கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகரின், மாணி அணை பகுதியில் செட் போட்டு, சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, அணையில் படகில் சென்று படப்பிடிப்பு நடத்தினர். படகில் ரிஷப் ஷெட்டி உட்பட, 10க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இருந்தனர். அப்போது காற்றின் வேகம் தாங்காமல், படகு திடீரென கவிழ்ந்தது. கலைஞர்கள் நீரில் விழுந்தனர். ஆழம் குறைவான பகுதி என்பதாலும், அனைவருக்கும் நீச்சல் தெரிந்ததாலும், நீந்தி கரைக்கு வந்தனர்.
'காந்தாரா படக்குழுவினருக்கு, அடுக்கடுக்கான பிரச்னைகள் வர, அப்படத்தில் காட்டப்படும் பஞ்சுருளி என்ற கடவுளின் கோபமே காரணம்' என, பலரும் கூறுகின்றனர். இதற்கிடையே, மாணி அணை பகுதியில், படப்பிடிப்பு நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் படப் பிடிப்பு நடத்தியுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையறிந்த ஷிவமொக்கா கலெக்டர் குருதத் ஹெக்டே, தாசில்தார் ரஷ்மி மூலமாக, படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார்.