எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிப்பில் 2018ல் வெளிவந்த படம் 'வட சென்னை'. ஒரு ரவுடியிசக் கதையாக அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு படம். படத்தின் இரண்டாம் பாகம் அதற்கடுத்து வரும் என்று சொல்லப்பட்ட நிலையில் இன்னும் அதற்கான அறிகுறி தென்படவேயில்லை.
இதனிடையே, வெற்றிமாறன், சிலம்பரசன் ஆகியோர் இணைந்து ஒரு படம் உருவாக உள்ளதாக கடந்த வாரத்திலிருந்தே தகவல்கள் வெளியாகின. வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்கவிருந்த 'வாடிவாசல்' படம் ஏறக்குறைய டிராப் ஆகிவிட்டது. வெற்றிமாறன், தனுஷ் இணைய உள்ள 'வட சென்னை' இரண்டாம் பாகம் அடுத்த வருடம்தான் ஆரம்பமாகும் என்றும் சொல்கிறார்கள்.
அதற்குள்ளாக தான் ஏற்கனவே எழுதி வைத்திருந்த 'வட சென்னை' படத்தின் 'ப்ரிகுவல்' அதாவது, அதன் முன்பகுதியை படமாக்க வெற்றிமாறன் முடிவு செய்துள்ளாராம். 'வட சென்னை' படத்தில் வலுவான ராஜன் கதாபாத்திரத்தின் இளமைக் காலம்தான் அந்த முன்பகுதிக் கதையாம். அதில்தான் சிலம்பரசன் நடிக்கப் போகிறார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
படத்திற்கு 'ராஜன் வகையறா' என்றும் தலைப்பு வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். 'தக் லைப்' படம் தந்த ஏமாற்றத்தில் இருக்கும் சிலம்பரசன் இந்தக் கதையைக் கேட்டதும் நடிக்க சம்மதித்துவிட்டார் என்கிறார்கள். தயாரிப்பு, மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வர வாய்ப்புள்ளது.