என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி தற்போது திரைக்கு வந்திருக்கும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில், விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படத்திற்கு கிடைத்து வரும் பாசிட்டிவான விமர்சனங்கள் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் ஆக வேண்டும் என்று தான் வாழ்த்துவதாக தெரிவித்திருக்கிறார்.
அதையடுத்து இன்னொரு பதிவில், இந்த மாதம் விஜய்யின் ஸ்பெஷல் மாதம் என்பதால் கோட் படத்தின் அப்டேட்களை அடுத்தடுத்து எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதனால் விஜய்யின் பிறந்தநாளில் கோட் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ள நிலையில் அதையடுத்து டீசர், டிரைலர் ரிலீஸ் செய்திகளும் வெளியாகும் என்று தெரிகிறது.