பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதரின் முதல் திருமணம் கசப்புடன் முடிவுக்கு வர, தன்னுடன் நடித்த சக நடிகரான அர்னவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் அர்னவுக்கு புதிய சீரியல் வாய்ப்பு கிடைக்க, அதில் நடித்து வரும் நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளார். இதனால் திவ்யாவுக்கும் அர்னவுக்கும் பிரச்னை எழுந்தது. இதில், கர்ப்பிணி என்று கூட பாராமல் திவ்யாவை அர்னவ் தாக்கியுள்ளார். இந்த விவகாரம் போலீஸ் புகார் வரை சென்று கடைசியில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் திவ்யா ஸ்ரீதர், மகளுக்கு முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு 'குழந்தைகள் கடவுளிடமிருந்து பிரிந்து வரும் நட்சத்திர துகள்கள், அப்படியொரு நட்சத்திரத்தை பெற்றெடுக்கும் பிறப்பின் வேதனையை அறிந்த அதிர்ஷ்டசாலி நான்' என மகள் பிறந்ததை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.