ராயன் : தனுஷ் பாடிய ‛அடங்காத அசுரன்' பாடல் வெளியீடு | விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது : மனைவி பிரேமலதா பெற்றார் | சல்மான்கானுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா | மேஜையை கண்டு பொறாமைப்பட்ட கமல் | பிறந்தநாளில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தும் விஜய்? | தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆகும் விக்ரமின் அந்நியன் | மம்முட்டிக்கு கொடுக்கப்பட்ட எக்ஸ்ட்ரா பவர் | படம் வெளியாவதற்கு முன்பே மறைந்த சங்கீத் சிவன் | மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் சொல்லப்பட்டது உண்மையா? - விசாரிக்க தமிழக அரசு உத்தரவு | அந்த மூணு சர்ப்ரைஸை தயவு செய்து சொல்லாதீங்க : இளன் வேண்டுகோள் |
சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையான சத்யப்ரியா மிரட்டலான பார்வை, அதட்டலான குரலால் வில்லி கதாபாத்திரத்திற்கு பெயர் போனவர். தமிழில் பல முன்னணி படங்களில் நடித்துள்ள இவர், பெரும்பாலும் நெகட்டிவ் ரோல்களில் தான் நடித்திருக்கிறார். தற்போது எதிர்நீச்சல் தொடரில் ஸ்ட்ரிக்ட்டான மாமியார் விசாலாட்சியாக தனது மருமகள்களை அடக்கி ஒடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கலாச்சாரம், பண்பாடு என மருமகள்களை மிரட்டி தனக்கு கீழே வைத்திருக்கும் சத்யப்ரியாவின் நிஜ வாழ்வே வேறு. சத்யப்ரியாவிற்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இதில் மகன் வெளிநாட்டில் வேலைபார்த்த போது, நியூஜெர்ஸியை சேர்ந்த லாரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமணத்தை முழுமனதுடன் ஏற்றுக்கொண்ட சத்யப்ரியா, மகன் மற்றும் மருமகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அண்மையில் சத்யப்ரியா தனது மகன் மற்றும் மருமகனுடன் சேர்ந்து யூ-டியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இதில் அவர் தனது மருமகளை மகளாக பாசம் காட்டுவதை பார்த்து வில்லி விசாலாட்சியா இப்படி? என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சத்யப்ரியாவின் குடும்ப புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.