சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பல சீரியல்களில் நடித்து வருபவர் ஸ்ரீநிதி. வலிமை படத்திற்கு விமர்சனம் செய்ததால் ரசிகர்கள் பலரும் ஸ்ரீநிதியை திட்டித்தீர்த்தனர். அதன்பிறகு அடிக்கடி பல சர்ச்சையான கருத்துகளை கூறி வந்த ஸ்ரீநிதி நடிகர் சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி, சிம்பு வீட்டின் முன் போராட்டம் நடத்தி சர்ச்சைகளை கிளப்பினார். அதுமட்டுமில்லாமல் நடிகை நக்ஷத்திராவின் காதலரால் நக்ஷத்திராவிற்கு ஆபத்து என்று கூறியும், சித்ராவை நினைவுப்படுத்தியும் பேசியிருந்தது சமூக ஊடங்கங்களில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நக்ஷத்திராவும் அவரது காதலரும் தனித்தனியே விளக்கமளித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து ஸ்ரீநிதியின் அம்மாவும் அவளது நடவடிக்கை சரியில்லை என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள சிகிச்சை மையத்தில் ஸ்ரீநிதி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. புழல் பகுதியில் அமைந்துள்ள அந்த மருத்துவமனையில் ஸ்ரீநிதிக்கு கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.