மாமன்னனே கடைசி : நல்ல படமாக அமைந்தது திருப்தி - உதயநிதி | தேவர் மகனுக்குப் பிறகு எனக்கு அருமையான படம் : வடிவேலு | 'ஜெயிலர்' படப்பிடிப்பு நிறைவு, கேக் வெட்டி கொண்டாட்டம் | வளர்ந்து வரும் நடிகருக்கு ஜோடியாகும் தமன்னா | விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்? | கமலின் 234 வது படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது | தங்கலான் படத்திற்காக பல பயிற்சிகளை பெற்ற மாளவிகா மோகனன் | ஆட்டோவில் சென்று ரசிகரின் அம்மாவிடம் உடல் நலம் விசாரித்த சூரி | மீண்டும் தனுஷூக்கு ஜோடியாக த்ரிஷா? | உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள் |
பிரபல நடிகர் யஷ் மற்றும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஆகிய இருவரும் கே.ஜி.எப். படத்தின் இரண்டு பாகங்களிலும் ஜோடியாக நடித்தனர். இந்த படங்களின் மூலம் ஸ்ரீநிதி ஷெட்டிக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. தமிழில் விக்ரமுடன் கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து இருந்தார். இந்த நிலையில் கே.ஜி.எப். படப்பிடிப்பில் ஸ்ரீநிதி ஷெட்டியை யஷ் அடிக்கடி துன்புறுத்தி தொல்லை கொடுத்ததாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும், இதனால் அவரோடு இனிமேல் நடிப்பது இல்லை என்று ஸ்ரீநிதி ஷெட்டி முடிவு செய்து இருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். அவர் டுவிட்டர் பக்கத்தில் அளித்த விளக்கத்தில், "சிலர் சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்புகின்றனர். யஷ் சிறந்த மனிதர். அவர் எப்போதும் எனக்கு தொந்தரவு கொடுத்ததே இல்லை. படப்பிடிப்பில் யஷ் உடன் நடிக்கும்போது எனக்கு எந்த அசவுகரியங்களும் ஏற்படவில்லை. யஷ் ஒரு ஜென்டில்மேன். அவரோடு இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாகவே இருந்தது. நான் எப்போதும் யஷ் ரசிகையாகவே இருப்பேன்'' என்று தெரிவித்துள்ளார் .