ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

பிரபல நடிகர் யஷ் மற்றும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஆகிய இருவரும் கே.ஜி.எப். படத்தின் இரண்டு பாகங்களிலும் ஜோடியாக நடித்தனர். இந்த படங்களின் மூலம் ஸ்ரீநிதி ஷெட்டிக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. தமிழில் விக்ரமுடன் கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து இருந்தார். இந்த நிலையில் கே.ஜி.எப். படப்பிடிப்பில் ஸ்ரீநிதி ஷெட்டியை யஷ் அடிக்கடி துன்புறுத்தி தொல்லை கொடுத்ததாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும், இதனால் அவரோடு இனிமேல் நடிப்பது இல்லை என்று ஸ்ரீநிதி ஷெட்டி முடிவு செய்து இருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். அவர் டுவிட்டர் பக்கத்தில் அளித்த விளக்கத்தில், "சிலர் சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்புகின்றனர். யஷ் சிறந்த மனிதர். அவர் எப்போதும் எனக்கு தொந்தரவு கொடுத்ததே இல்லை. படப்பிடிப்பில் யஷ் உடன் நடிக்கும்போது எனக்கு எந்த அசவுகரியங்களும் ஏற்படவில்லை. யஷ் ஒரு ஜென்டில்மேன். அவரோடு இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாகவே இருந்தது. நான் எப்போதும் யஷ் ரசிகையாகவே இருப்பேன்'' என்று தெரிவித்துள்ளார் .