'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் | ஆங்கிலோ இந்திய பெண்ணை காதலிக்கும் வடசென்னை பையன்: 'அன்பே டயானா'வின் கதை | ராதிகாவை கிழவியாக மாற்றிய வினீஷ் | துபாயில் அஜித் பாதுகாப்பாக இருக்கிறார்: மேலாளர் தகவல் | 'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குனர் மீது பாலியல் புகார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் அனைத்தையும் இழந்த தவக்களை | ரீ ரிலீஸில் ஏமாற்றிய விஜய்யின் 'தெறி' | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்ரமணியனை தனக்கு பாட வைத்த சிவாஜி | மார்ச் 4ல் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும், அதில் இல்லத்தரசிகள் மத்தியில் நல்லதொரு புகழை அடைந்திருக்கும் தொடர் பாக்கியலெட்சுமி. எதிர்பாராத திருப்பங்களுடன் கோபியின் ரகசியம், கோர்ட், விவாகரத்து, இரண்டாவது திருமணம் என தற்போது மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தொடரின் நாயகியான சுசித்ரா, பாக்கியலெட்சுமி கதாபாத்திரத்திலிருந்து விலகப்போவதாக செய்திகள் வெளியானது. அதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள சுசித்ரா, 'நான் சீரியலிலிருந்து விலகவில்லை. இப்போது கூட சூட்டிங்கில் தான் இருக்கிறேன். சீரியல் புரமோஷனுக்கான வேலைகள் சென்று கொண்டிருக்கிறது. நான் விலகுவதாக வெளிவந்த தகவல் பொய்யானது' என கூறியுள்ளார்.
பாக்கியலெட்சுமி தொடரின் டிஆர்பிக்கு நாயகியாக நடிக்கும் சுசித்ராவும் முக்கிய காரணம். அவரது நடிப்பை பார்த்து பல இல்லத்தரசிகள் அவரை தங்கள் இன்ஸ்பிரேஷனாக நினைத்து வருகின்றனர். இதற்காக ஒருமுறை விஜய் டிவியில் சிறப்பு விழா நடத்தப்பட்டு அதில் சுசித்ரா கெளரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




