பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

தமிழில் ‛மேகா படம் மூலம் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தவர் சிருஷ்டி டாங்கே. ‛டார்லிங், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் அமைதியாக வந்து சென்ற இவர், ‛ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான, ‛சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்றது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. ஆனால் முதல் நபராக அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் அளித்த பிரத்யேக பேட்டி:
இந்த நிகழ்ச்சியில் நானே விருப்பப்பட்டு தான் பங்கேற்றேன். ரொம்ப ‛ரிஸ்க் என்பது தெரியும். ‛அட்வெஞ்சர் மிகவும் பிடிக்கும். சர்வைவர் வாழ்க்கையை வாழ நினைத்தேன். என் முதல் ரியாலிட்டி ஷோ இது. அதனால், அனுபவத்திற்காகவே இதில் பங்கேற்றேன். நான் எவ்வளவு உறுதியான பெண் என்பதையும் காட்ட நினைத்தேன். அது எனக்கும் தெரிய வேண்டும்.
![]() |
இந்த நிகழ்ச்சி ஏற்கனவே திரைக்கதையாக உருவாக்கி எடுக்கப்பட்டது இல்லை. அப்படியிருந்தால் நான் முதலில் வெளியேறி இருக்க மாட்டேன். காட்டில் முதல் நாள் ரொம்பவே சிரமப்பட்டோம். குளிப்பது உள்ளிட்ட காலைக்கடன்களை கூட சரியாக செய்ய முடியவில்லை. முதல் மூன்று நாள் சரியாக சாப்பிட முடியாமல் பசியில் அவதிப்பட்டேன். மூன்று நாளும் பழங்கள் மட்டுமே சாப்பாடு. தண்ணீர் மட்டுமே சுத்தமாக இருந்தது. உடலில் சில தடிப்புகளும் வந்து விட்டது. இன்னும் முழுமையாக சரியாகவில்லை.
![]() |




