தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நேற்று (செப்.,13) பாராட்டு விழா நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றனர். விழா தொடர்பாக தற்போது இளையராஜா தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: நேற்றைய தினம் தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. அவ்வளவு ஆனந்தம். ஒரு பாராட்டு விழாவை இவ்வளவு சிறப்பாக, ஒரு முதல்வர், அரசு முனைப்புடன் செய்தது என்னால் நம்ப முடியவில்லை. எதற்காக எனக்கு இந்த பாராட்டுவிழா, இவ்வளவு அன்பு செலுத்த நான் என்ன செய்தேன் என முதல்வரிடம் கேட்டேன். அது நான் போட்ட இசையாக இருக்கலாம், அது வேறு சமாச்சாரம். அதனை அவர் தான் சொல்ல முடியும்.
இதனையெல்லாம் நான் எதிர்பார்ப்பவன் அல்ல. அப்படிப்பட்ட எனக்கு பாராட்டுவிழா என்பது, சிம்பொனியின் சிகரத்தை தொட்டதால்தான் நடந்திருக்கிறது. முதல்வர் என்னிடம் சங்கத்தமிழ் நூல் பாடல்களுக்கு நான் இசையமைக்க வேண்டும் என்றும், உங்களைத் தவிர வேறு யாராலும் அது முடியாது என சொன்னதும் எனக்கு மேலும் ஊக்களிக்கிறது. கண்டிப்பாக முதல்வரின் வேண்டுகோளை நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.