மன்னிக்க முடியாதது : ஹேமமாலினி கோபம் | கொரியன் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் ராஷ்மிகா மந்தனா | பிக்பாஸ் மலையாளம் சீசன் 7 டைட்டில் வென்ற சீரியல் நடிகை அனுமோல் | நடிகையானதை தொடர்ந்து மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்ட விஸ்மாயா மோகன்லால் | முதன்முறையாக தமிழில் அனுராக் காஷ்யப் கதையின் நாயகனாக நடிக்கும் 'அன்கில் 123' | தீவிர மருத்துவ சிகிச்சையில் நடிகர் தர்மேந்திரா : உடல்நிலையில் முன்னேற்றம் என மகள் தகவல் | ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? |

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நேற்று (செப்.,13) பாராட்டு விழா நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றனர். விழா தொடர்பாக தற்போது இளையராஜா தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: நேற்றைய தினம் தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. அவ்வளவு ஆனந்தம். ஒரு பாராட்டு விழாவை இவ்வளவு சிறப்பாக, ஒரு முதல்வர், அரசு முனைப்புடன் செய்தது என்னால் நம்ப முடியவில்லை. எதற்காக எனக்கு இந்த பாராட்டுவிழா, இவ்வளவு அன்பு செலுத்த நான் என்ன செய்தேன் என முதல்வரிடம் கேட்டேன். அது நான் போட்ட இசையாக இருக்கலாம், அது வேறு சமாச்சாரம். அதனை அவர் தான் சொல்ல முடியும்.
இதனையெல்லாம் நான் எதிர்பார்ப்பவன் அல்ல. அப்படிப்பட்ட எனக்கு பாராட்டுவிழா என்பது, சிம்பொனியின் சிகரத்தை தொட்டதால்தான் நடந்திருக்கிறது. முதல்வர் என்னிடம் சங்கத்தமிழ் நூல் பாடல்களுக்கு நான் இசையமைக்க வேண்டும் என்றும், உங்களைத் தவிர வேறு யாராலும் அது முடியாது என சொன்னதும் எனக்கு மேலும் ஊக்களிக்கிறது. கண்டிப்பாக முதல்வரின் வேண்டுகோளை நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.




