தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தக் லைப் படத்திற்கு பின் நடிகர் கமல்ஹாசன் அடுத்து சண்டை இயக்குனர்கள் அன்பு அறிவு இயக்கத்தில் நடிக்கிறார். இது அவரது 237வது படமாக உருவாகிறது. இதனை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். பல மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் ஏதோ காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த படம் கைவிடப்பட்டது எனவும் தகவல்கள் பரவியது. தற்போது இந்த படத்தில் பிரபல மலையாள கதை எழுத்தாளர் ஷியாம் புஷ்கரன் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர். இவர் மலையாளத்தில் கும்பலாங்கி நைட்ஸ், மகிஷிண்டே பிரதிகாரம் உள்ளிட்ட படங்களில் கதை எழுத்தாளர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.