சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
மலையாளத்தில் கடந்த வருடம் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான படம் மார்கோ. அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக வெளியான இந்த படம் அதீத வன்முறை காட்சிகள் நிறைந்த படமாகவும், கடுமையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் ரசிகர்களின் வரவேற்பு பெற்று நூறு கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. ரசிகர்கள் ஒரு பக்கம் பாராட்டினாலும் இன்னும் ஒரு தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் இந்த படத்திற்கு நிறைய எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பின.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதற்கு இரண்டாம் பாகம் உருவாகும் என்று ஏற்கனவே தயாரிப்பாளரும், நடிகர் உன்னி முகுந்தன் கூறி இருந்தனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு இந்த இரண்டாம் பாகத்தில் நான் நடிக்க விரும்பவில்லை, அந்த அளவிற்கு முதல் பாகத்தில் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து விட்டேன், அதனால் ரசிகர்கள் என் மீது வருத்தப்பட வேண்டாம்” என்று உன்னி முகுந்தன் கூறினார். இதனை தொடர்ந்து சமீப நாட்களாகவே ரசிகர்கள் இந்த படத்தின் தயாரிப்பாளரிடம் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உங்களால் தயாரிக்க முடியவில்லை என்றால் தயவு செய்து உங்களிடம் உள்ள மார்க்கோ குறித்த உரிமைகளை இன்னொரு படக்குழுவிற்கு விற்று விடுங்கள் என்று வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து தற்போது தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் அவர் கூறும்போது, “மார்கோ படத்தின் அடுத்த பாகம் உருவாக்குவது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன எங்களது கியூப் என்டர்டெயின்மென்ட்ஸ் தான் இந்த மார்க்கோ படத்திற்கான உரிமைகள் அனைத்தையும் சொந்தமாக வைத்திருக்கிறோம். அதற்கான பெருமையை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். இரண்டாம் பாகத்திற்கான உரிமையை யாருக்கும் விட்டுக் கொடுப்பதாகவும் இல்லை” என்று கூறியுள்ளனர்.
படத்தின் கதாநாயகனாக நடித்த உன்னி முகுந்தனே இதிலிருந்து விலகுவதாக கூறிய பின்னரும். தயாரிப்பாளர் இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் இருப்பதாக தயாரிப்பாளர் உறுதி அளித்து இருப்பது ஆச்சரியத்தை எழுப்பி உள்ளது.