திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் |
சியாம் பிரவீன் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருக்கும் திரைப்படம் “தி ஸ்மைல் மேன்”. சரத்குமாரின் 150வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆழியா என்னும் குழந்தை நட்சத்திரமும் நடித்துள்ளார்.வரும் டிசம்பர் 27ம் தேதி படம் வெளியாகிறது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவை சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அப்போது குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஆழியா, நடிகர் சரத்குமாரை பார்த்து ‛அங்கிள்' எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
அதுக்குறித்து பேசிய சரத்குமார், ‛‛நான் எப்போதும் இளமை தான்; எனக்கு வயசு ஆகவே ஆகாது. ஆழியா வளர்ந்து என்னுடைய படத்தில் ஹீரோயினியாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை'' என்றார். அப்போது செய்தியாளர்கள் ‛சூர்யவம்சம் 2' குறித்த அப்டேட் கேட்டனர். அதற்கு பதிலளித்த சரத்குமார், ‛‛அது குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி விரைவில் அறிவிப்பார்'' என்றார்.