'பேமிலி' படங்களுக்கு மாறுகிறதா தமிழ் சினிமா? | 'முருகர்' பற்றிய படத்தில் நடிக்கப் போகிறாரா ஜுனியர் என்டிஆர்? | 3 பிஎச்கே : ஒரே மேடையில் வாழ்த்திய 'டிரென்டிங்' இளம் இயக்குனர்கள் | இரு மொழிப் படங்கள்: உஷார் ஆவார்களா தமிழ் நடிகர்கள் ? | டிஜிட்டல் தரத்தில் 'உம்ராவ் ஜான்' - நாளை ரீரிலீஸ் | கார்த்தி படத்தில் நானி? | சிரஞ்சீவி 157வது படத்தில் வெங்கடேஷ்? | தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் எச்.வினோத்! | மாநாடு 2ம் பாகம் உருவாகிறதா? | போலீஸ் அதிகாரியாக மணிகண்டன்! |
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில், அம்ரித் ராம்நான் இசையமைப்பில், சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீதா ரகுநாத், சைத்ரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் '3பிஎச்கே'. இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இப்படக்குழுவினருடன் தமிழ் சினிமாவில் சில தரமான படங்களையும், முக்கிய படங்களையும் இயக்கிய இளம் இயக்குனர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். இவர்கள் அனைவருமே டிவியில் ஒளிபரப்பான 'நாளைய இயக்குனர்கள்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். அன்று முதல் இன்று வரை எந்த ஒரு போட்டி, பொறாமை இல்லாமல் நட்புடன் இருந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே மேடையில் சக இயக்குனருக்கு வாழ்த்து சொன்னது ஆச்சரியமாகவும், ஆரோக்கியமாகவும், பாராட்டும்படியும் இருந்தது.
'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், 'மகாராஜா' இயக்குனர் நிதிலன் சாமிநாதன், 'டிராகன்' இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து, 'அயலான்' இயக்குனர் ரவிக்குமார், 'மாவீரன்' இயக்குனர் மடோன் அஷ்வின், 'டாடா' இயக்குனர் கணேஷ் பாபு, 'லப்பர் பந்து' இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, 'பார்க்கிங்' இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், 'கொட்டுக்காளி' இயக்குனர் வினோத்ராஜ், 'அயலி' வெப்சீரிஸ் இயக்குனர் முத்துக்குமார், இயக்குனர் அரவிந்த், இயக்குனர் சக்திவேல், ஆகியோருடன் இயக்குனர் மாரி செல்வராஜ், ராம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இத்தனை இளம் இயக்குனர்கள் ஒரே மேடையில் கலந்து கொண்டு நிகழ்வு இதுவாகத்தான் இருக்கும்.