எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில், சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் மற்றும் பல நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த படம் '3பிஹெச்கே'. குடும்பப்பாங்கான படமாக அமைந்து இப்படம் ரசிகர்களின் வரவேற்பை ஓரளவிற்குப் பெற்றது.
இப்படத்திற்கு மிகப் பெரும் பிரபலத்திடமிருந்து தற்போது பாராட்டு கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் 'சாட்' செய்தார்.
அப்போது ஒரு ரசிகர், “நீங்கள் எப்போதாவது திரைப்படம் பார்ப்பீர்களா, ஏதாவது பிடித்தது ?,” என்று கேட்டுள்ளார். அதற்கு சச்சின், “எனக்கு நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன். '3பிஹெச்கே' மற்றும் 'அடா தம்பிச்சா' ஆகிய படங்களை சமீபத்தில் ரசித்துப் பார்த்தேன்,” என பதிலளித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தமிழ்ப் படங்களையும் பார்க்கும் பழக்கம் உள்ளவர் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
தங்கள் படத்தை சச்சின் பார்த்தது குறித்து '3பிஹெச்கே' தயாரிப்பாளர் அருண் விஸ்வா, “பல முறை டைப் செய்தும் வார்த்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. நான் சிலவற்றைக் கண்டுபிடித்து பிறகு பதிலளிக்கிறேன். ஏனெனில், நான் இப்போது என் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்றைப் பார்த்தேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.