பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” | ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் | 'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் | தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் |
கோவாவில் தற்போது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக 'சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் பல மொழிகளை சேர்ந்த நடிகைகள், இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் சுஹாசினி பேசியதாவது:
சினிமா துறை மற்ற துறைகளைவிட வித்தியாசமானது. மற்ற துறைகளில் நீங்கள் வேலை முடிந்ததும் வீட்டுக்கு சென்றுவிடலாம். ஆனால் சினிமாவில் அப்படி போக முடியாது. 200 அல்லது 300 பேர் படப்பிடிப்புக்காக ஒரு இடத்துக்கு செல்லும்போது அங்கேயே ஒரு குடும்பமாக தங்கி இருக்க வேண்டும். விதிகளை கடைபிடிக்காமல் இருக்கும் பட்சத்தில் அங்கே எல்லை மீறல் நிகழ்வதற்கு அதிக சாத்தியங்கள் உண்டு. 200 பேர் கொண்ட ஒரு படக்குழுவில், குடும்பத்தை விட்டு தனியாக இருப்பவர்கள் மீது சிலர் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வார்கள். அதுவும் இல்லாமல், தற்போது புதிதாக வரும் சினிமாவுக்குள் நுழையும் இளைஞர்களுக்கு போதுமான அனுபவமும் இருப்பதில்லை . இதைத்தான் சிலர் தவறாக பயன்படுத்தி கொள்ள நினைக்கிறார்கள்.
மற்ற சினிமா துறைகளைவிட, மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு. காரணம், மலையாள படங்கள் பெரும்பாலும் வெவ்வேறு லோகேஷன்களில் எடுக்கப்படுகின்றன. இதனால் நடிகைகள் மாதக்கணக்கில் தங்கள் வீட்டை விட்டு பிரிந்திருக்க நேரிடுகிறது. இதனால் அவர்களிடம் தவறாக நடந்துகொள்கிறார்கள். மலையாள திரையுலகில் இதுதான் நடக்கிறது.
தமிழ் சினிமாவில் படப்பிடிப்பு முடிந்தால் நான் சென்னைக்கு சென்றுவிடுவேன், தெலுங்கில் ஷூட்டிங் முடிந்தால் ஐதராபாத் சென்றுவிடுவேன். கர்நாடகாவில் என்றால் நான் பெங்களூரு சென்றுவிடுவேன். ஆனால் மலையாள சினிமாவில் ஷூட்டிங் முடிந்தால், உங்களால் வீட்டுக்கு திரும்பிச் செல்ல முடியாது. காரணம், அங்கே அப்படி ஒரு இடம் இல்லாததால், உங்களால் வெளியில் எங்கேயுமே செல்ல முடியாது. அதனால்தான், படப்பிடிப்பு தளங்களில் எல்லைகள் மீறப்படுகின்றன" என்றார் சுஹாசினி.