கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

80களில் தொடங்கி இன்றுவரை தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர் சுஹாசினி. அவர் அறிமுகமான 'நெஞ்சத்தை கிள்ளாதே' படம் வெள்ளி விழா கொண்டாடி இன்று வரைக்கும் கிளாசிக்கல் மூவியாக இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் சுஹாசினி நடிக்க மறுத்தார் என்பதும் உண்மை.
இயக்குனர் மகேந்திரன் 'ஜானி' படத்தை இயக்கி கொண்டிருந்தபோது ஒரு வேலையாக மும்பை சென்றார். அங்கு அவர் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அப்போது ஒரு இளம் பனி கொட்டும் அதிகாலையில் பேண்ட் டிசர்ட் அணிந்து ஜாக்கிங் செய்து கொண்டிருந்தார். இப்படி சுதந்திரமாக ஓடும் பெண் வாழ்க்கையில் எத்தனை பிரச்னைகள் வருமோ என்று அவர் மனசுக்குள் எழுந்த கேள்விதான் 'நெஞ்சத்தை கிள்ளாதே' படமாக உருவானது.
இந்த படத்தில் நடிக்க நடிகையின் எந்த சாயலும் இல்லாத அதே நேரத்தில் துணிச்சலான, சுறுசுறுப்பான பெண் வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்தார். கமல்ஹாசன் குடும்பதிற்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவருக்கு சுஹாசினியை சிறுமியாக இருப்பதில் இருந்து தெரியும். அவரையே நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் அப்போது அவர் பெரிய ஒளிப்பதிவாளராக வேண்டும் என்று அசோக்குமாரிடம் உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். மகேந்திரனின் 'ஜானி' படத்திலும் பணியாற்றினார். அவரை அழைத்து நடிக்க கேட்டபோது “போங்க அங்கிள் நான் பெரிய கேமரா உமனாக வேண்டும். இந்த நடிப்பெல்லாம் சரிப்பட்டு வராது” என்று உறுதியாக மறுத்து விட்டார்.
முயற்சியை தளரவிடாத மகேந்திரன் சுஹாசினியின் தந்தையான சாருஹாசன், மகேந்திரனின் குடும்ப நண்பர் என்பதால் அவரின் மூலம் பேசினார். மிகுந்த வற்புறுத்தலுக்குப் பின் 'ஓகே.. இந்த ஒரேயொரு படம் மட்டுமே நடிப்பேன். இடையில் பிடிக்கவில்லையென்றால் விலகி விடுவேன்' என்கிற நிபந்தனையுடன் நடிக்க வந்த சுஹாசினி பிற்காலத்தில் தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையானார், படமும் இயக்கினார்.