மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா | புதையல் கதையில் நாக சைதன்யா | மறுவெளியீட்டுக்காக 20 நிமிடங்கள் குறைக்கப்பட்ட 'ஆட்டோகிராப்' | தமிழ் சினிமாவில் தெலுங்கு ஆதிக்கம் | நாயகன் படத்தின் தொடர்ச்சியா... தக் லைப் : கமல் பதில் | இல்லறத்தில் 25வது ஆண்டு, சினிமாவில் 30வது ஆண்டு | விஷால், தன்ஷிகா இணைய காரணமான டி.ராஜேந்தர் |
80களில் தொடங்கி இன்றுவரை தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர் சுஹாசினி. அவர் அறிமுகமான 'நெஞ்சத்தை கிள்ளாதே' படம் வெள்ளி விழா கொண்டாடி இன்று வரைக்கும் கிளாசிக்கல் மூவியாக இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் சுஹாசினி நடிக்க மறுத்தார் என்பதும் உண்மை.
இயக்குனர் மகேந்திரன் 'ஜானி' படத்தை இயக்கி கொண்டிருந்தபோது ஒரு வேலையாக மும்பை சென்றார். அங்கு அவர் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அப்போது ஒரு இளம் பனி கொட்டும் அதிகாலையில் பேண்ட் டிசர்ட் அணிந்து ஜாக்கிங் செய்து கொண்டிருந்தார். இப்படி சுதந்திரமாக ஓடும் பெண் வாழ்க்கையில் எத்தனை பிரச்னைகள் வருமோ என்று அவர் மனசுக்குள் எழுந்த கேள்விதான் 'நெஞ்சத்தை கிள்ளாதே' படமாக உருவானது.
இந்த படத்தில் நடிக்க நடிகையின் எந்த சாயலும் இல்லாத அதே நேரத்தில் துணிச்சலான, சுறுசுறுப்பான பெண் வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்தார். கமல்ஹாசன் குடும்பதிற்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவருக்கு சுஹாசினியை சிறுமியாக இருப்பதில் இருந்து தெரியும். அவரையே நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் அப்போது அவர் பெரிய ஒளிப்பதிவாளராக வேண்டும் என்று அசோக்குமாரிடம் உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். மகேந்திரனின் 'ஜானி' படத்திலும் பணியாற்றினார். அவரை அழைத்து நடிக்க கேட்டபோது “போங்க அங்கிள் நான் பெரிய கேமரா உமனாக வேண்டும். இந்த நடிப்பெல்லாம் சரிப்பட்டு வராது” என்று உறுதியாக மறுத்து விட்டார்.
முயற்சியை தளரவிடாத மகேந்திரன் சுஹாசினியின் தந்தையான சாருஹாசன், மகேந்திரனின் குடும்ப நண்பர் என்பதால் அவரின் மூலம் பேசினார். மிகுந்த வற்புறுத்தலுக்குப் பின் 'ஓகே.. இந்த ஒரேயொரு படம் மட்டுமே நடிப்பேன். இடையில் பிடிக்கவில்லையென்றால் விலகி விடுவேன்' என்கிற நிபந்தனையுடன் நடிக்க வந்த சுஹாசினி பிற்காலத்தில் தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையானார், படமும் இயக்கினார்.