சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
80களில் தொடங்கி இன்றுவரை தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர் சுஹாசினி. அவர் அறிமுகமான 'நெஞ்சத்தை கிள்ளாதே' படம் வெள்ளி விழா கொண்டாடி இன்று வரைக்கும் கிளாசிக்கல் மூவியாக இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் சுஹாசினி நடிக்க மறுத்தார் என்பதும் உண்மை.
இயக்குனர் மகேந்திரன் 'ஜானி' படத்தை இயக்கி கொண்டிருந்தபோது ஒரு வேலையாக மும்பை சென்றார். அங்கு அவர் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அப்போது ஒரு இளம் பனி கொட்டும் அதிகாலையில் பேண்ட் டிசர்ட் அணிந்து ஜாக்கிங் செய்து கொண்டிருந்தார். இப்படி சுதந்திரமாக ஓடும் பெண் வாழ்க்கையில் எத்தனை பிரச்னைகள் வருமோ என்று அவர் மனசுக்குள் எழுந்த கேள்விதான் 'நெஞ்சத்தை கிள்ளாதே' படமாக உருவானது.
இந்த படத்தில் நடிக்க நடிகையின் எந்த சாயலும் இல்லாத அதே நேரத்தில் துணிச்சலான, சுறுசுறுப்பான பெண் வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்தார். கமல்ஹாசன் குடும்பதிற்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவருக்கு சுஹாசினியை சிறுமியாக இருப்பதில் இருந்து தெரியும். அவரையே நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் அப்போது அவர் பெரிய ஒளிப்பதிவாளராக வேண்டும் என்று அசோக்குமாரிடம் உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். மகேந்திரனின் 'ஜானி' படத்திலும் பணியாற்றினார். அவரை அழைத்து நடிக்க கேட்டபோது “போங்க அங்கிள் நான் பெரிய கேமரா உமனாக வேண்டும். இந்த நடிப்பெல்லாம் சரிப்பட்டு வராது” என்று உறுதியாக மறுத்து விட்டார்.
முயற்சியை தளரவிடாத மகேந்திரன் சுஹாசினியின் தந்தையான சாருஹாசன், மகேந்திரனின் குடும்ப நண்பர் என்பதால் அவரின் மூலம் பேசினார். மிகுந்த வற்புறுத்தலுக்குப் பின் 'ஓகே.. இந்த ஒரேயொரு படம் மட்டுமே நடிப்பேன். இடையில் பிடிக்கவில்லையென்றால் விலகி விடுவேன்' என்கிற நிபந்தனையுடன் நடிக்க வந்த சுஹாசினி பிற்காலத்தில் தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையானார், படமும் இயக்கினார்.