ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.பி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேம் சேஞ்சர்'. தெலுங்கில் தயாராகி பான் இந்தியா படமாக ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சியை ஆந்திர மாநில தலைநகரான அமராவதி நகரில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தெலுங்குத் திரைப்படங்களுக்கான நிகழ்ச்சிகளை ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள பல முக்கிய ஊர்களில் நடத்துவது வழக்கம்.
ஆந்திரா மாநில சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் கூட்டணி வென்ற பிறகு பெரிய திரைப்பட விழாக்கள் இன்னும் நடக்கவில்லை. தற்போது ஆந்திர துணை முதல்வராகவும் இருக்கும் பவன் கல்யாணின் அண்ணன் சிரஞ்சீவியின் மகன் தான் ராம் சரண் என்பதால் அமராவதியில் விழா நடத்தினால் ஆந்திர ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் என படக்குழு முடிவெடுத்துள்ளதாம். அதோடு பவன் கல்யாணையும் நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளதாகவும் தெரிகிறது.
துணை முதல்வராகப் பதவியேற்ற பின் பவன் கல்யாண் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி இதுவாக இருக்கலாம். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகலாம்.