திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
ஒரு காலத்தில் இந்தியாவில் மாந்த்ரீகவாதிகள் சிறப்புற்று விளங்கினார்கள். மன்னர்களின் அரசவையில் அவர்கள் முக்கிய இடம் வகித்தார்கள். அரசியலை தீர்மானிப்பவர்களாகவும் இருந்தார்கள். இப்படி சக்தி மிக்க இவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான படம்தான் 'மாயா மச்சீந்திரா'.
இந்த படம் 1931ம் ஆண்டே ஹிந்தி மற்றும் மாராட்டிய மொழிகளில் தயாரிக்கப்பட்டது. 1939ம் ஆண்டுதான் தமிழில் தயாரிக்கப்பட்டது. ராஜா சந்திரசேகர் இயக்கினார். மச்சீந்திராவாக எம்.கே.ராதா நடித்தார். அவரது ஜோடியாக எம்.பி.ராதாபாய் நடித்தார். என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் எம்.ஜி.சக்ரபாணி உள்ளிட்ட பலர் நடித்தார்கள். பாபநாசம் சிவன் இசை அமைத்தார்.
இந்த படத்தில் ஹீரோவுக்கு இணையான வில்லன் கதாபாத்திரம் 'சூரிய கேது'. அந்த வில்லனுக்கு சகோதரராக எம்ஜிஆர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஓரிரு காட்சிகளில் வந்து பின்னர் கொல்லப்பட்டு விடுவதான கேரக்டர். வில்லன் சூரிய கேதுவாக நடராஜ பிள்ளை என்பவர் நடிப்பதாக இருந்தது.
படக் குழுவினர் படப்பிடிப்புக்காக மும்பை சென்றபோது உடல்நலக்குறைவால் நடராஜ பிள்ளையால் வரமுடியவில்லை. உடல் நலம் சரியாகி வந்து விடுவார் என்று மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. ஆனால் நடராஜ பிள்ளை இறந்த செய்திதான் கிடைத்தது. இதனால் படத்தின் இயக்குனர் ராஜா சந்திரசேகர் எம்ஜிஆரை வில்லனாக நடிக்க வைத்தார். இந்த படத்தில் எம்ஜிஆரின் நடிப்பு பேசப்பட்டது. படமும் பெரிய வெற்றி பெற்றது.