கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? |

1980களில் இயக்குநர் கனவுடன் மதுரையிலிருந்து புறப்பட்டவர்களில் இளவரசுவும் ஒருவர். பாரதிராஜா இயக்கிய படங்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பி. கண்ணனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். இயக்குனராக வேண்டும் என்று சினிமாவுக்கு வந்தவர் ஒளிப்பதிவாளரானால் போதும் என்ற முடிவுக்கு வந்தார்.
இயக்குனர் பாரதிராஜா, பட யூனிட்டில் தனக்கு பிடித்தவர்களுக்கு ஏதாவது ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்பு கொடுப்பது வழக்கம். அந்த வகையில் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்த இளவரசுக்கு 'வேதம் புதிது' படத்தில் சத்யராஜ் நடித்த பாலு தேவர் கதாபாத்திரத்தைச் சொத்துக்கு ஆசைப்பட்டுக் கொல்லும் வேடம் ஒன்று இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய ஆள் வராமல் போகவே, அந்த வாய்ப்பு இளவரசுவுக்கு கிடைத்தது. இரண்டு வசனம் பேசி இளவரசு நடித்தார்.
இளவரசு நடிப்பு நன்றாக இருந்ததால் மேலும் சில காட்சிகளை சேர்த்தார். ஆனால் தணிக்கை குழுவால் இளவரசு நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது. என்றாலும் இளவரசுக்கு நடிப்பு ஆசை வந்தது. கண்ணனிடமிருந்து பிரிந்து 17 படங்கள் வரை ஒளிப்பதிவு செய்தாலும் நடிப்பிலேயே தீவிரம் கட்டினார். தற்போது முன்னணி குணச்சித்திர நடிகராக விளங்கும் இளவரசு 200 படங்களுக்கு மேல் நடித்து விட்டார்.




