'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
தற்போது துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது நடித்த படங்களில் ஒன்று 'ஏஞ்சல்'. இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்த நிலையில் தயாரிப்பாளருக்கு இருந்த பொருளாதார சிக்கலால் படம் நின்று போனது. பின்னர் உதயநிதி ஸ்டாலின் அரசிலுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் படத்தை தயாரித்த ஓ.எஸ்.டி.பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராம சரவணன் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த 'ஏஞ்சல்' திரைப்படத்தை தயாரித்தேன். இந்த படத்தை கே.எஸ்.அதியமான் இயக்கினார், கடந்த 2018ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. இன்னும் 20 சதவீதம் படப்பிடிப்பு பாக்கி உள்ளது.
இந்தநிலையில் 'மாமன்னன்' படம்தான் தனக்கு கடைசி படம் என்றும் நடிப்பில் இருந்து விலகுவதாகவும் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். ஏஞ்சல் படத்துக்கு இதுவரை 13 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளேன். என்னுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தந்து நடித்து கொடுக்க உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த இழப்பீடு கேட்டு மனுதாரர் 5 ஆண்டுகள் காலதாமதமாக தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் “ஏஞ்சல் படத்தின் தயாரிப்பாளர் சட்டவிதிகளின் படி 3 ஆண்டுகளுக்குள் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். அந்த கால அளவை கடந்திருப்பதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று தீர்ப்பளித்தது.