ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
நடிகர் சிவாஜி தான் சம்பாதித்த பணத்தில் பார்த்து பார்த்து கட்டிய வீடு அன்னை இல்லம். அந்த வீட்டில் சிவாஜியின் வாரிசுகள் இப்போதும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்கள். ஆனால் அந்த அன்னை இல்லத்துக்கே சோதனை வந்தபோது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனும், நடிகருமான துஷ்யந்த், தனது மனைவி அபிராமியுடன் சேர்ந்து ஈசன் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் சார்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படம் தயாரிக்க, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார்.
ஆனால் உரிய நேரத்தில் கடன்தொகை திருப்பி செலுத்தப்படாததால் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 9 கோடியை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தொகையை கொடுக்காததால், அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், இந்த வீடு தன் பெயரில் உள்ளது என்று பிரபு மனு தாக்கல் செய்ததால், ஜப்தி உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இதை எதிர்த்து தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் முறையீட்டு மனு, தாக்கல் செய்தது.
இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. அப்போது, இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டு விட்டதாக கூறி, வழக்கை திரும்ப பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். கடன் கொடுத்த நிறுவனத்திற்கு அசல் தொகை செலுத்தப்பட்டு விட்டதாகவும், வட்டியை தவணை முறையில் செலுத்த ஒத்துக் கொண்டுவிட்டதாகவும் அதனால் வழக்கு வாபஸ் பெறப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.