என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
நடிகர் சிவாஜி தான் சம்பாதித்த பணத்தில் பார்த்து பார்த்து கட்டிய வீடு அன்னை இல்லம். அந்த வீட்டில் சிவாஜியின் வாரிசுகள் இப்போதும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்கள். ஆனால் அந்த அன்னை இல்லத்துக்கே சோதனை வந்தபோது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனும், நடிகருமான துஷ்யந்த், தனது மனைவி அபிராமியுடன் சேர்ந்து ஈசன் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் சார்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படம் தயாரிக்க, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார்.
ஆனால் உரிய நேரத்தில் கடன்தொகை திருப்பி செலுத்தப்படாததால் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 9 கோடியை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தொகையை கொடுக்காததால், அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், இந்த வீடு தன் பெயரில் உள்ளது என்று பிரபு மனு தாக்கல் செய்ததால், ஜப்தி உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இதை எதிர்த்து தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் முறையீட்டு மனு, தாக்கல் செய்தது.
இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. அப்போது, இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டு விட்டதாக கூறி, வழக்கை திரும்ப பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். கடன் கொடுத்த நிறுவனத்திற்கு அசல் தொகை செலுத்தப்பட்டு விட்டதாகவும், வட்டியை தவணை முறையில் செலுத்த ஒத்துக் கொண்டுவிட்டதாகவும் அதனால் வழக்கு வாபஸ் பெறப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.