கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
பல திரைப்படங்களின் வெற்றிக்கு ஒரே ஒரு பாடல் காரணமாக அமைந்து விடும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் 'நாளை நமதே' படத்தில் 'நாளை நமதே' என்ற பாடல். இப்படி ஒரு பாடல் 1948ம் ஆண்டே வெளிவந்து படத்தையும் வெற்றி பெற வைத்தது. படம் 'ஆதித்யன் கனவு'. பாடல் 'மதுரமான ருசி உள்ளதே... பால்கோவா...' என்ற பாடல்.
மார்டன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம் இயக்கி, தயாரித்தார். இதில் டி.ஆர்.மகாலிங்கம், அஞ்சலி தேவி, டி.ஆர்.ரஜனி, கே.பி.கேசவன், எம்.ஜி.சக்ரபாணி, காளி என்.ரத்னம், சி.டி.ராஜகாந்தம், ஜெய கவுரி, ஏ.கருணாநிதி மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.
உயிருக்கு உயிரான இரண்டு நண்பர்கள் ஒரு நாட்டின் தளபதியாக இருப்பார்கள். நண்பர்களில் ஒருவருக்கு ஆண் குழந்தையும், இன்னொருவருக்கு பெண் குழந்தையும் பிறந்தால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று உறுதி பூண்டிருப்பார்கள். ஆனால் சில ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்து வெவ்வேறு தேசங்களுக்கு சென்று விடுவார்கள். ஒருவருக்கு டி.ஆர்.மகாலிங்கமும், இன்னொருவருக்கு அஞ்சலிதேவியும் குழந்தைகளாக பிறப்பார்கள். அவர்களின் கனவு படி இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என்பதுதான் படத்தின் கதை.
பல படங்களில் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர ஒரு குடும்ப பாடல் இருக்கும் அப்படி இந்த படத்தில் குடும்பத்தை சேர்க்கும் பாடலாக அமைந்ததுதான் 'பால்கோவா' பாடல். இந்த பாடலை டி.ஆர்.மகாலிங்கமும், சூலமங்கலம் ஜெயலட்சுமியும் பாடினார்கள். ஜி.ராமநாதன் இசை அ மைத்திருந்தார், பாபநாசம் சிவன் பாடலை எழுதியிருந்தார். இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவியது. படத்தில் இடம்பெற்ற லலிதா - பத்மினியின் நடன நாடகமும் படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணமாக அமைந்தது.
(பால்கோவா பாடலை கேட்க இதனை கிளிக் செய்யவும் https://www.youtube.com/watch?v=7ifl6sKnPn4)