ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

பிரிட்டிஷ் - இந்திய திரைப்பட இயக்குனர் சந்தியா சூரி இயக்கிய 'சந்தோஷ்' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக, இங்கிலாந்து சார்பாக பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படம். இப்படம் கடந்த வருடத்தில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது.
அப்படத்தை இந்தியாவில் திரையிடுவதற்காக தணிக்கைக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், படத்தில் உள்ள சில பல வசனங்கள், காட்சிகளை நீக்க வேண்டுமென தணிக்கைத் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், அதை நீக்க மறுத்துள்ளார் இயக்குனர். எனவே, படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது.
அப்படி தடை விதிக்கப்பட்ட 'சந்தோஷ்' திரைப்படத்தை சென்னையில் இன்று ஆரம்பமாகும் பி.கே.ரோஸி திரைப்பட விழாவில் ஏப்ரல் 6ம் தேதி காலை 9 மணிக்கு திரையிட உள்ளதாக அறிவித்துள்ளார்கள். இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் இந்தத் திரைப்பட விழாவை நடத்துகிறது.
இந்தியாவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஒரு திரைப்படத்தை திரைப்பட விழாக்களில் மட்டும் திரையிட அனுமதித்துள்ளார்களா என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.