டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? |
பிரிட்டிஷ் - இந்திய திரைப்பட இயக்குனர் சந்தியா சூரி இயக்கிய 'சந்தோஷ்' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக, இங்கிலாந்து சார்பாக பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படம். இப்படம் கடந்த வருடத்தில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது.
அப்படத்தை இந்தியாவில் திரையிடுவதற்காக தணிக்கைக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், படத்தில் உள்ள சில பல வசனங்கள், காட்சிகளை நீக்க வேண்டுமென தணிக்கைத் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், அதை நீக்க மறுத்துள்ளார் இயக்குனர். எனவே, படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது.
அப்படி தடை விதிக்கப்பட்ட 'சந்தோஷ்' திரைப்படத்தை சென்னையில் இன்று ஆரம்பமாகும் பி.கே.ரோஸி திரைப்பட விழாவில் ஏப்ரல் 6ம் தேதி காலை 9 மணிக்கு திரையிட உள்ளதாக அறிவித்துள்ளார்கள். இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் இந்தத் திரைப்பட விழாவை நடத்துகிறது.
இந்தியாவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஒரு திரைப்படத்தை திரைப்பட விழாக்களில் மட்டும் திரையிட அனுமதித்துள்ளார்களா என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.