ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரிட்டிஷ் - இந்திய திரைப்பட இயக்குனர் சந்தியா சூரி இயக்கிய 'சந்தோஷ்' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக, இங்கிலாந்து சார்பாக பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படம். இப்படம் கடந்த வருடத்தில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது.
அப்படத்தை இந்தியாவில் திரையிடுவதற்காக தணிக்கைக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், படத்தில் உள்ள சில பல வசனங்கள், காட்சிகளை நீக்க வேண்டுமென தணிக்கைத் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், அதை நீக்க மறுத்துள்ளார் இயக்குனர். எனவே, படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது.
அப்படி தடை விதிக்கப்பட்ட 'சந்தோஷ்' திரைப்படத்தை சென்னையில் இன்று ஆரம்பமாகும் பி.கே.ரோஸி திரைப்பட விழாவில் ஏப்ரல் 6ம் தேதி காலை 9 மணிக்கு திரையிட உள்ளதாக அறிவித்துள்ளார்கள். இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் இந்தத் திரைப்பட விழாவை நடத்துகிறது.
இந்தியாவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஒரு திரைப்படத்தை திரைப்பட விழாக்களில் மட்டும் திரையிட அனுமதித்துள்ளார்களா என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.