Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏழு முறை தற்கொலை செய்ய முயற்சித்தேன் ! இயக்குனர் செல்வராகவன் வெளியிட்ட வீடியோ

28 அக், 2024 - 03:17 IST
எழுத்தின் அளவு:
I-tried-to-commit-suicide-seven-times!-Video-released-by-director-Selvaraghavan
Advertisement


சமீப காலமாக சோசியல் மீடியாவில் தன்னைப் பற்றிய கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் இயக்குனர் செல்வராகவன், தற்போது ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், ஏழு முறை தான் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், உலகம் முழுக்க பார்த்தால் வாழ்க்கையில் இந்த இரண்டையும் முயற்சிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஒன்று தற்கொலை முயற்சி. இன்னொன்று டிப்ரஷன். நான் இதுவரை ஏழு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.

ஒவ்வொரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்யும்போதும் எனக்குள் ஒரு குரல் கேட்கும். ஏதோ சொல்வது மாதிரி, ஏதோ கேட்கிற மாதிரி இருப்பதை உணர்வேன். நம்மிடத்தில் கடவுள் தான் ஏதோ சொல்லுகிறார் என்று நினைத்து தற்கொலை முயற்சியை கைவிட்டு விடுவேன். ஒரு ஆறு மாதம், ஒரு வருடம் கழித்து வாழ்க்கையில் திடீரென்று மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும். அப்போ நாம் தற்கொலை செய்து இருந்தால் இந்த சந்தோசத்தை இழந்திருப்போமே என்று நினைத்துக் கொள்வேன்.

வாழ்க்கையில் இது தான் தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்களின் உண்மையான நோக்கம். அடுத்த ஜென்மத்தில் நம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதாக தான் இருக்கும். சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு குடியிருப்பில் பிறந்து சந்தோஷமா வாழ வேண்டும் என்று நினைப்போம். ஆனால் கூவத்தில் பிறந்து பன்னியாகவோ காட்டில் மரத்தில் தொங்கும் பேயாகவோ பிறந்தால் யார் என்ன செய்ய முடியும்.

நமக்குள் கேட்கும் குரல் கடவுளின் குரலாகவோ அல்லது வேறுநபரின் குரலாகவோ கூட இருக்கலாம். அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் அந்த குரல் உங்களுக்குள் கேட்காமல் இருக்காது. அது உண்மையானது என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தேசிய போர் நினைவிடத்தில் சாய் பல்லவியின் வீர வணக்கம்தேசிய போர் நினைவிடத்தில் சாய் ... ரித்திகா சிங் வெளியிட்ட பெண்களுக்கான விழிப்புணர்வு வீடியோ! ரித்திகா சிங் வெளியிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap