10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

கடந்த 2022ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற படத்தை இயக்கிய செல்வராகவன் தற்போது ஏற்கனவே தான் இயக்கிய 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். செல்வராகவனுக்கும், அவரது மனைவி கீதாஞ்சலிக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும், அதன் காரணமாகவே கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டதாகவும் ஒரு செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து அவர்கள் விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்தி பரவி வருகிறது.
இந்த நேரத்தில் செல்வராகவன் எக்ஸ் பக்கத்தில் போட்டுள்ள ஒரு பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், ‛‛திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றி உள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். நீ எல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள். அப்போது அமைதியா இருங்கள். சில காலம்தான் பெரும் மலை பனியாய் போகும். அனைத்தும் சரியாகிவிடும்'' என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்துவிட்டு செல்வராகவன் குடும்பத்தில் ஏதோ பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. அதைத்தான் அவர் இப்படி வெளிப்படுத்தி உள்ளார் என்று பலரும் கமெண்ட்கள் கொடுத்து வருகிறார்கள்.