சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். அவரது பயோபிக் படமாக உருவாகியுள்ள 'அமரன்' படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்காக சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படக்குழுவினர் சென்று படத்தை புரமோஷன் செய்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே, டில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்று வீர வணக்கம் செலுத்தியுள்ளார் சாய் பல்லவி. “அமரன்' படத்திற்கான புரமோஷனை ஆரம்பிப்பதற்கு முன்பாக தேசிய போர் நினைவிடத்திற்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினேன். சில தினங்களுக்கு முன்பு அங்கு சென்றேன். நமக்காகத் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ஒவ்வொரு துணிச்சலான இதயத்தின் நினைவாக இந்த புனிதமான கோவிலில் ஆயிரக்கணக்கான 'செங்கல் போன்ற மாத்திரைகள்' உள்ளன. மேஜர் முகுந்த் வரதராஜன், சிப்பாய் விக்ரம்சிங் ஆகயோருக்கு மரியாதை செலுத்தும் போது நான் உணர்ச்சிகளால் நிறைந்திருந்தேன். நன்றி மற்றும் வீர வணக்கங்கள்,” என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.