Advertisement

சிறப்புச்செய்திகள்

குபேரா படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! | செப்.10ம் தேதி வெளியாகும் தேவாரா பட டிரைலர்! | டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரிக்கு ‛கலையுலக வாழ்நாள் சாதனையாளர்' விருது | கமல்ஹாசன் இடத்தை நிரப்புவாரா விஜய் சேதுபதி? | 27வது ஆண்டில் சூர்யா: 44வது படத்தின் போஸ்டர் வெளியானது! | ரஜினியின் வேட்டையன் படத்தின் முதல் பாடல்: செப்டம்பர் 9ம் தேதி வெளியாகிறது! | விஜய் கட்சியின் மாநாடு- 50 ஆயிரம் பேருக்கு அனுமதி கொடுத்த காவல்துறை! | தமிழில் முதல் 'பான் இந்தியா' படம் 'கங்குவா' தான், ஏன்? | சிம்ரன் நடிக்கும் 'தி லாஸ்ட் ஒன்' | கருமேகங்கள் விலகட்டும் ; ஹேமா கமிஷன் குறித்து மனம் திறந்த மஞ்சு வாரியர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

3 பாகமாக உருவாகும் 'வேள்பாரி' : ஷங்கர் தகவல்

11 ஜூலை, 2024 - 03:18 IST
எழுத்தின் அளவு:
vel-paari-to-be-made-in-3-parts-:-Shankar

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள 'இந்தியன் 2' படம் நாளை(ஜூலை 12) திரைக்கு வருகிறது. அடுத்த ஆண்டு 'இந்தியன் 3' வெளியாகும். இதற்கிடையில் தெலுங்கில் ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகி வரும் 'கேம் சேஞ்சர்' படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து 'வேள்பாரி மன்னன்' சரித்திர கதையை படமாக எடுக்கப் போவதாக ஷங்கர் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கொரோனா சமயத்தில் தான் 'வேள்பாரி' நாவலை படித்து முடித்தேன். மிகவும் சுவாரஸ்யமான வகையில் அவரது வாழ்க்கை சம்பவங்கள் இருந்தன. படிக்க படிக்க அவை காட்சிகளாக விரிந்தன. அதன்பிறகு அதற்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டேன். அவை மொத்தம் 3 பாகமாக உருவாகும். வேள்பாரியாக நடிப்பது யார் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

நான் ரசிகர்கள் பார்வையில் இருந்தே கதை மற்றும் காட்சிகளை உருவாக்குகிறேன். ஆஸ்கர் விருதை எதிர்பார்க்கவில்லை. 'இந்தியன் 2' படப்பிடிப்பை நடத்தியபோது இரண்டு பாகங்களுக்கான கதை அதற்குள் இருந்தது. அவற்றை வெட்டி எறிய மனமில்லாமல் 'இந்தியன் 3'ம் பாகத்தை உருவாக்கினோம். 'இந்தியன் 4'ம் பாகம் எடுக்கும் திட்டம் இல்லை என்றார்.

கடையேறு வள்ளல்களில் ஒருவர் வேல்பாரி. பறம்பு மலையை தலைநகாராக கொண்டு ஆட்சி புரிந்தவர். அவர் ஆட்சியில் மக்கள் செழிப்புடன் வாழ்ந்தனர். இல்லை என்று வந்தவர்களுக்கு அள்ளிக் கொடுத்தவன் பாரி, பறம்பு மலையில் வளங்கள் கொட்டிக் கிடந்தது.

பாரியின் புகழை அழிக்கவும், பறம்பு மலை செல்வதை கொள்ளை அடிக்கவும் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தனித்தனியாக போர் தொடுத்து தோற்றனர். இறுதியாக மூவேந்தர்களும் இணைந்து பாரியை எதிர்த்து போராடி வென்றனர். பாரி மன்னனின் இந்த வீர கதையை கொஞ்சம் கற்பனை கலந்து சு.வெங்கடேஷன் நாவலாக எழுதியிருந்தார். அந்த நாவலையே ஷங்கர் படமாக இயக்க இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சுசீந்திரன் படத்தில் 3வது முறையாக இணைந்த மீனாட்சிசுசீந்திரன் படத்தில் 3வது முறையாக ... ஒருநாள் மட்டும் ‛இந்தியன் 2' சிறப்பு காட்சிக்கு அனுமதி ஒருநாள் மட்டும் ‛இந்தியன் 2' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in