மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

மும்பையில் அயூப் கான் ஏற்பாடு செய்த முதல் சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு மொழிகளில் இருந்து திரைப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பூனம் தில்லான், போமன் இரானி, யஷ்பால் சர்மா, மேகா ரே, ரவி கோசைன், அனுப் சோனி, ஏக்தா ஜெயின், ராஜேஷ் தெலாங், சையத் அகமது மற்றும் அயூப் கான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தர்மாராவ் பாபா அத்ரம் , மாஸ்டர் பீஸ், தி இமாம், தாதா லக்ஷ்மி, நனீரா, அவதாரி, புரமோஷன், ராஜ் கபூர் லூனி ட்யூன்ஸ், பாஸ், அந்தர்நாடு, பிளாக் காபி, எண்ட் இஸ் பிகினிங், டிப்ரஷன், லாஸ்ட் சீன், பிரேக் தி சைலன்ஸ் உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன. இதில் டிவி நடிகை மேகா ரேயின் முதல் குறும்படமான ‛மாஸ்டர் பீஸ்' திரைப்படம் தான் அதிகம் பேசப்பட்டன. போட்டோகிராபியின் வாழ்க்கையை மையமாக கொண்ட இப்படம் ஓடிடி தளங்களுக்காகவே தயாரிக்கப்பட்டது.
இது பற்றி மேகா ரே கூறுகையில், ‛‛மாஸ்டர் பீஸ் ஓடிடி.,க்காக உருவாக்கப்பட்டாலும், பெரிய திரையில் அதை பார்ப்பதில் மகிழ்ச்சி. இது எனக்கு ஒரு பெருமையான தருணம். இது ஒரு ஆர்வமுள்ள புகைப்படக் கலைஞரின் கதை'' என்றார்.