திருமண மோதிரம் 'மிஸ்ஸிங்' : மீண்டும் பிரிவு சர்ச்சையில் ஐஸ்வர்யா ராய் | அந்த இடத்தில் டாட்டூ? சுந்தரி நடிகைக்கு குவியும் அட்வைஸ் | கோலாகலமாக நடந்து முடிந்த அஷ்வத் - கண்மணி திருமணம் | செப்டம்பர் 20ல் 8 படங்கள் ரிலீஸ்… | மணிமேகலைக்கு குவியும் ஆதரவு! | நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் -2 படத்தின் முக்கிய அறிவிப்பு! | சினிமாவை விட வெளியில் தான் பாதுகாப்பின்மையை உணர்கிறேன்: ஷ்ரத்தா ஸ்ரீநாத் | 18 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் பொம்மரிலு | பிளாஷ்பேக் ; போலீஸ் பெல்டால் தந்தையிடம் அடி வாங்கிய ராம்சரண் | நடிகையின் குற்றச்சாட்டுக்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவித்த நடிகர் ஆசிப் அலி |
திருமணத்திற்கு முன்பு போட்டோஷுட், திருமணத்திற்குப் பின்பு போட்டோஷுட் போக தாய்மை அடைந்து குழந்தை பெறுவதற்கு முன்பாக 'பிரக்னன்சி' போட்டோஷுட் நடத்துவதும் தற்போது 'பேஷன்' ஆகிவிட்டது. சினிமா பிரபலங்கள் மட்டுமல்ல மற்றவர்களும் கூட இப்படி புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பாலிவுட்டின் பிரபலமான நடிகையான தீபிகா படுகோனே, பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கைக் காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த வருடம் பிப்ரவரி மாதம் தீபிகாவின் தாய்மை பற்றி இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன்பின் 'கல்கி 2898 ஏடி' பட புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கூட தீபிகா கலந்து கொண்டார். அவரது 'பேபி பம்ப்' புகைப்படத்தை எடுக்க பாலிவுட் புகைப்படக் கலைஞர்கள் பெரிதும் பிரயத்தனப்பட்டார்கள்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான தீபிகாவின் கர்ப்பகால புகைப்பட போட்டோஷுட் ஒன்றை நடத்தி பல புகைப்படங்களை தீபிகா, ரன்வீர் ஜோடி வெளியிட்டுள்ளது. பல சினிமா பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த மாதக் கடைசியில் தீபிகாவுக்கு குழந்தை பிறக்க உள்ளதாகத் தகவல். இன்ஸ்டாவில் நேற்றிரவு அவர்கள் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் 50 லட்சம் லைக்குகளைக் கடந்துள்ளன.