ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
துணிச்சலான பேச்சுகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் பெயர் பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் விரைவில் வெளியாக உள்ள எமர்ஜென்சி படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது ஆளும் பிஜேபி கட்சியில் உள்ள அவர் ஒரு காங்கிரஸ் கட்சி தலைவரின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அரசியல் ரீதியாக ஏற்கனவே மிகப்பெரிய சலசலப்பு ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் மலையாள நடிகர் விஷாக் நாயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சமீபத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான புட்டேஜ் படத்தில் கதாநாயகனாக நடித்து கவனம் ஈர்த்தவர். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தனக்கு சில நபர்களிடம் இருந்து போனில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக கூறியுள்ளார் விஷாக் நாயர்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் நான் மறைந்த பாரதப் பிரதமர் இந்திராவின் மகன் சஞ்சய் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளேன். ஆனால் சில நான் ஜர்னைல் சிங் பிந்திரன்வாலே என்பவரின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தவறாக நினைத்துக் கொண்டு சிலர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். தயவுசெய்து சம்பந்தப்பட்ட நபர்கள் என் மீது வெறுப்பை காட்டுவதற்கு முன்பாக உங்களுக்கு தகவல் கொடுத்தவர்களிடம் அந்த செய்தியின் உண்மைத் தன்மை பற்றி முதலில் விசாரியுங்கள்” என்று தனது சோசியல் மீடியா பதிவு மூலமாக கூறியுள்ளார்.