கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

துணிச்சலான பேச்சுகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் பெயர் பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் விரைவில் வெளியாக உள்ள எமர்ஜென்சி படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது ஆளும் பிஜேபி கட்சியில் உள்ள அவர் ஒரு காங்கிரஸ் கட்சி தலைவரின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அரசியல் ரீதியாக ஏற்கனவே மிகப்பெரிய சலசலப்பு ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் மலையாள நடிகர் விஷாக் நாயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சமீபத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான புட்டேஜ் படத்தில் கதாநாயகனாக நடித்து கவனம் ஈர்த்தவர். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தனக்கு சில நபர்களிடம் இருந்து போனில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக கூறியுள்ளார் விஷாக் நாயர்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் நான் மறைந்த பாரதப் பிரதமர் இந்திராவின் மகன் சஞ்சய் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளேன். ஆனால் சில நான் ஜர்னைல் சிங் பிந்திரன்வாலே என்பவரின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தவறாக நினைத்துக் கொண்டு சிலர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். தயவுசெய்து சம்பந்தப்பட்ட நபர்கள் என் மீது வெறுப்பை காட்டுவதற்கு முன்பாக உங்களுக்கு தகவல் கொடுத்தவர்களிடம் அந்த செய்தியின் உண்மைத் தன்மை பற்றி முதலில் விசாரியுங்கள்” என்று தனது சோசியல் மீடியா பதிவு மூலமாக கூறியுள்ளார்.




