தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ள நிலையில் செப்டம்பர் 23ம் தேதி விக்ரவாண்டியில் இந்த கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்து காவல்துறை கேட்ட 21 கேள்விகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில் கொடுத்ததை அடுத்து, 50 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மீடியாக்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் ஆண்கள் 30 ஆயிரம் பேர், பெண்கள் 15 ஆயிரம் பேர், முதியவர்கள் ஐந்தாயிரம் பேர், மாற்றுத்திறனாளிகள் 500 பேர் வீதம் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தார். காவல்துறையின் இந்த கட்டுப்பாடு காரணமாக இந்த மாநாட்டில் சிறுவர், சிறுமிகளுக்கு அனுமதி இல்லை என்பது தெரிய வந்துள்ளது. என்றாலும் 50 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற காவல்துறையின் இந்த கட்டுப்பாட்டை விஜய் ஏற்றுக் கொள்வாரா? இல்லை ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு செல்வாரா? என்கிற கேள்விகள் எழுந்திருக்கிறது.