பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ள நிலையில் செப்டம்பர் 23ம் தேதி விக்ரவாண்டியில் இந்த கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்து காவல்துறை கேட்ட 21 கேள்விகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில் கொடுத்ததை அடுத்து, 50 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மீடியாக்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் ஆண்கள் 30 ஆயிரம் பேர், பெண்கள் 15 ஆயிரம் பேர், முதியவர்கள் ஐந்தாயிரம் பேர், மாற்றுத்திறனாளிகள் 500 பேர் வீதம் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தார். காவல்துறையின் இந்த கட்டுப்பாடு காரணமாக இந்த மாநாட்டில் சிறுவர், சிறுமிகளுக்கு அனுமதி இல்லை என்பது தெரிய வந்துள்ளது. என்றாலும் 50 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற காவல்துறையின் இந்த கட்டுப்பாட்டை விஜய் ஏற்றுக் கொள்வாரா? இல்லை ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு செல்வாரா? என்கிற கேள்விகள் எழுந்திருக்கிறது.