பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ள நிலையில் செப்டம்பர் 23ம் தேதி விக்ரவாண்டியில் இந்த கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்து காவல்துறை கேட்ட 21 கேள்விகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில் கொடுத்ததை அடுத்து, 50 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மீடியாக்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் ஆண்கள் 30 ஆயிரம் பேர், பெண்கள் 15 ஆயிரம் பேர், முதியவர்கள் ஐந்தாயிரம் பேர், மாற்றுத்திறனாளிகள் 500 பேர் வீதம் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தார். காவல்துறையின் இந்த கட்டுப்பாடு காரணமாக இந்த மாநாட்டில் சிறுவர், சிறுமிகளுக்கு அனுமதி இல்லை என்பது தெரிய வந்துள்ளது. என்றாலும் 50 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற காவல்துறையின் இந்த கட்டுப்பாட்டை விஜய் ஏற்றுக் கொள்வாரா? இல்லை ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு செல்வாரா? என்கிற கேள்விகள் எழுந்திருக்கிறது.