நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

'பொன்னியின் செல்வன்' படத்தில் கடைசியாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராய் நேற்று(ஏப்.,21) திருமண நாளை முன்னிட்டு செல்பி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். கணவர் அபிஷேக்பச்சன், மகள் ஆராத்யா ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எந்த கேப்ஷனும் இல்லாமல் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் 'ஹாட்டின் எமோஜி' ஒன்றை மட்டுமே சேர்த்துள்ளார். ரசிகர்கள் பலரும் அவர்களது திருமண நாளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா அவரது கணவர் அபிஷேக்கை விட்டு பிரிய உள்ளார் என்ற வதந்திகள் வெளிவந்தன. அப்போதும் பேமிலி செல்பி ஒன்றைப் பகிர்ந்து அவற்றிற்கு பதிலடி கொடுத்தார். 'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் பிறகு வேறு எந்த புதிய படத்திலும் நடிக்க ஐஸ்வர்யா இதுவரை ஒப்பந்தமாகவில்லை.