ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

காதலித்து திருமணம் செய்து கொண்ட அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நட்சத்திர தம்பதிக்கு ஆரத்யா என்ற மகள் இருக்கிறார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக சோசியல் மீடியாவில் ஒரு வதந்தி பரவி வந்தது. குறிப்பாக, ஆனந்த் அம்பானி திருமணத்தில் ஐஸ்வர்யாராயும், அபிஷேக் பட்சனும் தனித்தனியே கலந்து கொண்டதால் அந்த வதந்தி மேலும் காட்டுத்தீயாக பரவியது. ஆனபோதிலும் அதற்கு அவர்கள் தொடர்ந்து மறுத்து வந்தார்கள்.
இப்படியான நிலையில்தான் கடந்த ஐந்தாம் தேதி மும்பையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் ஜோடியாக கலந்து கொண்டுள்ளார்கள். அப்போது தங்களது குடும்பத்தாருடன் செல்பி எடுத்துள்ளார் ஐஸ்வர்யாராய். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி அவர்களின் விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.




