லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
சசிகுமார் தற்போது நடித்து வரும் படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இதில் அவருக்கு மனைவியாக சிம்ரன் நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், குமரவேல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மில்லியன் டாலர் ஸ்டூடியோ சார்பில் யுவராஜ் கணேசன், எம்ஆர்பி எண்டர்டெயின்மென்ட் சார்பில் மகேஷ் ராஜ் தயாரிக்கிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். புதுமுகம் அபிஷன் ஜீவந்த் இயக்குகிறார்.
இந்த படத்தில் சசிகுமார் இரண்டு மகன்களுக்கு தந்தையாக நடிக்கிறார். மகன்களாக மலையாளத்தில் பெரிய ஹிட்டான 'ஆவேஷம்' படத்தில் நடித்த மிதுனும், கமலேஷும் மகன்களாக நடிக்கிறார்கள்.
படம் பற்றி சசிகுமார் கூறியிருப்பதாவது : இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க முடியாமல் அங்கிருந்து வந்து சென்னையில் குடியேறும் ஒரு ஈழத் தமிழர் குடும்பம், அந்த ஏரியாவே விரும்பும் ஓர் குடும்பமாக எப்படி மாறுகிறது என்பதுதான் கதை.
ஈழத் தமிழர்கள் என்றால் அவர்கள் பட்ட கஷ்டத்தையும் வலியையும் பற்றித்தான் பேசுவார்கள். இதில் அவர்கள் கஷ்டத்தை எவ்வளவு தூரம் சந்தோஷமாக மாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறோம். கதை சொல்லும்போதே 16 வயதுப் பையனுக்கும் ஒரு சின்னப் பையனுக்கும் தகப்பன்னு தெரியும். கதையைச் சொல்லும்போதே தைரியமாக இருந்தேன்.
நிச்சயமாக இந்தக் கதையை இன்னொரு ஹீரோ கிட்டே சொல்ல முடியாது. இதில் நான்தான் நடிக்கணும். இப்ப இருக்கிற தமிழ் சினிமாவில் 16 வயதுப் பையனுக்கு அப்பாவா ரெண்டு, மூணு பேரைத் தவிர யாரும் நடிக்க மாட்டாங்க. அவங்களுக்கு 25 வயதில் பையன்கூட இருப்பாங்க. இருந்தாலும் அப்பாவா நடிக்கமாட்டாங்க.
இந்த கதையும் சில ஹீரோக்களிடம் சொல்லப்பட்டு பிறகுதான் என்னிடம் வந்தது. நான் நடிக்கத் தயார்னு சொன்னேன். இங்கே கதை தான் முக்கியம். சமீபகாலத்தில், அழகாய் சொன்ன விதத்தில் முழுத் திருப்தியாகக் கேட்டது இந்தக் கதைதான். என்கிறார் சசிகுமார்.