படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‛விடுதலை' படத்தின் முதல் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளார்கள். இதில் சூரி, விஜய் சேதுபதி, வெற்றிமாறன் பங்கேற்றனர்.
இந்த திரைப்படத்தை பார்த்தவர்கள் எழுந்து நின்று ஐந்து நிமிடம் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளார்கள். இதுகுறித்த வீடியோவை இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் எஸ்.தாணு. தமிழ் சினிமா தற்போது உலக அரங்கை நோக்கி சென்று கொண்டிருப்பது இந்த கைதட்டல் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் விஜய் சேதுபதி, சூரி, தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
நடிகர் சூரி வெளியிட்ட பதிவில் ‛‛நெதர்லாந்த், ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை பாகம் 1 மற்றும் 2க்கு அங்கே இருந்த சினிமா ரசிகர்கள் எழுந்து நின்று மிகுந்த எழுச்சியோடு தந்த நெகிழ வைக்கும் பாராட்டு இது!! தொடர்ந்து சில நிமிடங்கள் கரவொலி கேட்டபடி இருந்தது...'' என நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார்.