புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
தெலுங்குத் திரையுலகின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். அவர் நடித்து வெளிவந்த 'புஷ்பா' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நேற்று டில்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றார்.
அதே போல, அதே படத்திற்காக சிறந்த பாடல்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் பெற்றார். அல்லு அர்ஜுன், தேவிஸ்ரீபிரசாத் இருவரும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள். அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் தற்போது வசிக்க, தேவிஸ்ரீபிரசாத் சென்னையில்தான் இன்னமும் வசித்து வருகிறார்.
நேற்று தேசிய விருது பெற்ற பிறகு தேவிஸ்ரீபிரசாத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் புகைப்படங்களைப் பகிர்ந்து அல்லு அர்ஜுன், “எனது பால்ய நண்பர், எனது இசையமைப்பாளர், எனது நலம் விரும்பி, எனது உற்சாகத் தலைவருடன் சேர்ந்து பெற்றது மறக்க முடியாத நிகழ்வு. முதல் முறையாக இருவரும் ஒன்றாக சேர்ந்து பெற்றது மிக்க மகிழ்ச்சி. சென்னை சாலைகளிலிருந்து, டில்லி அரங்கு வரை… இது ஒரு 25 வருடப் பயணம்,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.