ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர் ஜெயராம் கடந்த சில வருடங்களாகவே மலையாளத்தில் நடிப்பதை குறைத்துக்கொண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் ஜெயராமின் நடிப்பிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தெலுங்கிலும் இளம் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதுதவிர தற்போது கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் கோஸ்ட் படத்தில் நடிப்பதன் மூலம் கன்னடத்திலும் நுழைந்துள்ளார்.
இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் ஆப்ரஹாம் ஒஸ்லர் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் ஜெயராம். இந்த படத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் சீரியல் கொலைகளை கண்டுபிடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக ஜெயராம் நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் மம்முட்டியும் ஒரு முக்கியான கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பில் மம்முட்டியும் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
இது குறித்த புகைப்படமும் தற்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற அஞ்சாம் பாதிரா படத்தை இயக்கிய மிதுன் மானுவேல் தாமஸ் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். மம்முட்டி கெஸ்ட் ரோலில் நடித்தாலும் இந்த கொலை வழக்கில் முக்கியமான திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.